தேவேந்திரர் புராணத்தில் இரண்டு வரலாற்று மோதல்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஒன்று, நெல் வேளாண்மைக்குத் தேவையான காளைகளை வைதீக வேள்வி வன்முறையிலிருந்து காப்பாற்றும் முகமாக உருவாகிய முரண்; மற்றொன்று, பாரம்பரிய நிலங்களையும் நீர் நிலைகளையும் பறிகொடுத்த போது எழுந்த முரண். * முதல் முரண் வரலாற்றில் பெளத்த - வைதீக முரண் என்று அழைக்கப்படுகிறது. இந்த முரணில், அரசியல் படுத்தப்பட்ட தன்னிலையே ‘தேவேந்திரன்’. அதன் எதிர்நிலை ‘பிராமணம்’. அந்த வகையில், தேவேந்திரத் தன்னிலையின் இன்றியமையாத ஒரு பகுதி, ‘அபிராமணம்’. வாய்மொழி மற்றும் எழுத்து மரபுகள் தேவேந்திரன் என்ற பெயரை பெளத்தத்தோடும், நெல் விவசாயத்தோடும், தீண்டாமையோடும் தொடர்பு படுத்துவதைக் கொண்டே நாம் இந்த முடிவிற்கு வருகிறோம். கால் நடைச் சமூக வாழ்விலிருந்து கிளைத்திருக்கக்கூடிய வேள்வி மரபு, வீணே கொல்லும் விலங்குகள் வேளாண் சமூகத்திற்கான உயிர் நாடியாக மாறும் பொழுது, அதை எதிர்த்து வெகுஜனக் கொந்தளிப்பொன்ரு உருவாகியிருக்க வேண்டும். இந்தக் கொந்தளிப்பை எதிர்கொள்ள முடியாத பிராமணர்கள் வேள்வி உயிர்க்கொலையை நிறுத்தினார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அநாவசியம