tag:blogger.com,1999:blog-5586114575800884909.post110681764878089884..comments2022-06-12T11:40:14.272+05:30Comments on டி. தருமராஜ்: மாதொருபாகன் என்ற புனிதப்பிரதிtdharumaraj.blogspot.inhttp://www.blogger.com/profile/04723478441829193278noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5586114575800884909.post-65674970858648472052015-02-02T11:29:51.349+05:302015-02-02T11:29:51.349+05:30... தொடர்ச்சி..
சாதியைப் பொறுத்தவரை, பெருமாள் மு...... தொடர்ச்சி..<br /><br /><br />சாதியைப் பொறுத்தவரை, பெருமாள் முருகன் இந்த நாவலில் செய்திருப்பது, சாதியை முழுதும் உள்வாங்கிய ஒரு குடியானவனின் வாழ்க்கையை மிகையின்றிச் சித்தரித்திருப்பது தான். குடியானவனின் வாழ்க்கையில் சொத்தும், வாரிசும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. 'பணத்தச் சேத்து வெச்சு என்ன செய்யப் போறீங்க? நல்லா சாப்புட்டு, துணிமணி வாங்கி உடுத்திச் சந்தோஷமா இருங்க', என்று முத்துவின் தங்கை நங்கை சொல்கிறாள். இரண்டாம் மாமனின் மனைவியிடம் (கதிர்வேலுவின் அம்மா) சண்டை போடும் போது, 'கொழந்த இல்லாதயே போயி சொத்தக் கண்டவுங்களுக்குக் கொடுத்தாலும் அவளுக்கு மட்டும் ஒரு பைசா கொடுக்கக் கூடாது', என்று பொருமுகிறாள் பொன்னா. 'எதுக்கு இப்படி கஞ்சத்தனம் பன்னிச் சேத்து வெக்கறீங்க? புருஷனில்லாத பொம்பளயும், பிள்ளையில்லாத சொத்தும் ஒன்னும்பாங்க', என்று சொல்கிறாள் பொட்டுப்பாட்டி. காளியின் சொத்து, உன் வாரிசுகளுக்குத் தான் என்று முத்துவிடம் அவன் கூட்டாளிகள் சொல்கிறார்கள். இப்படிக் கதை நெடுகே, சொத்து ஒருவனின் வாரிசுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் குணம், குடியானச் சாதியின் குணம். அந்தக் குணாதியசத்தைத் துலங்க வைக்கும் பாத்திரமாக, காளியின் சித்தப்பா படைக்கப்பட்டிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. <br /><br />தீண்டாச் சாதிக்காரனைப் பற்றிய கவலை காளிக்கு மட்டுமல்ல, பொன்னாவுக்கும் உள்ளூர இருக்கிறது. " எங்கயாச்சும் போயீ ஒரு குழந்தையக் கொண்டா. தீண்டாச் சாதி வீட்டில இருந்து எடுத்துட்டு வந்தாலுஞ் சரி. இந்தச் சொந்தப்புள்ள இல்லாத சொத்துன்னு நாளைக்கு ஒருத்தி சொல்லக் கூடாது", என்று ஆவேசமாக காளியைத் தொண்டப்பட்டியிலிருந்து தள்ளுகிறாள் பொன்னா (ப 184). அது ஒரு குடியானவச்சி தன் சொத்தின் வாரிசுக்காக, சாதியை(க் கூட), ஒதுக்கி வைக்க ஒத்துக்கொள்ளும் தருணம். <br /><br />காளி, குடித்து விட்டு மண்டையனின் பிறக்கவிருக்கிற குழந்தையைத் தான் தத்து எடுத்துக் கொள்ள தயாராக இருப்பதாகச் சொல்லும் போது, காத்தாயி, 'குடிச்சுப்பிட்டா பிய்யவா தின்னுருவ? போதையில கவுண்டரு கிட்ட சொல்லீர்ர. நாளைக்கு வந்து கேட்டார்னா என்ன சொல்வே? பெத்த குழந்தைய அப்பிடித் தூக்கிக் கொடுக்க முடியுமா? குடுத்தாலுந்தான் கவுண்டரூட்ட சாணாப் பிள்ள வளர முடியுமா?', எனத் தன் கணவன் மண்டையனைக் கடுமையாகச் சாடுகிறாள். அந்தச் சாடலில் தெரிவது ஒரு தாயின் கவலை மட்டுமல்ல, அன்று நிலவிய சாதிக் கட்டமைப்பின் நிதரிசனமும் தான். <br /><br />பொன்னா, 14 ஆம் நாள் பண்டிகைக்கு வண்டியில் பயணம் செய்யும் போது, கக்கத்தில் துண்டை வைத்துக் கொண்டு, மிகப் பணிவாக இடம் கேட்கும் சக்கிலியனின் குழந்தைகளை ஆசையுடன் பார்க்கிறாள். சக்கிலியன் யாரையும் தீண்டாமல், தன் குடும்பத்தை வண்டியினுள் சாமர்த்தியமாக அமர்த்துவதையும், தன் தந்தையை விட மிகத் திறமையாக வண்டியை ஓட்டுவதையும் கவனிக்கிறாள். இந்தக் குழந்தைகளைப் போல, "துரு துருவென இருக்கும் குழந்தைகளைத் தர வேண்டும்", எனக் கடவுளை வேண்டுகிறாள். பொன்னாவின் மன நிலை, கடவுளிடம் இறைஞ்சும் ஒரு யாசகனின் நெகிழ்ந்த மன நிலையாக இருக்கிறது. மனிதனைக் கடவுளாகப் பார்க்கப் பிரயத்னப்படுபவளின் மன நிலை. ஓர்ஃபிக் (Orphic)/பாக்கிக்(Bacchic) சடங்குகளில் விதிகளை மீற எத்தனிப்பவனின் (Enthusiasmous) மன நிலை. அன்று அவளிருக்கும் மனநிலையில் தான் சாதி பெரிதாகத் தெரிவதில்லை. அந்த மனமாற்றம் நேராவிட்டால், அந்தப் பண்டிகையில் அவளால் பங்கு கொண்டிருக்கவே முடிந்திருக்காது எனத் தோன்றுகிறது. இதைக் குறிப்பிடவின்றி, அந்தச் சக்கிலியன், அந்தப் பயணத்தில் பங்கு கொள்வதாகச் சித்தரிக்க எந்தக் காரணமும் இல்லை என்றே என் மனதிற்குப் பட்டது.<br /><br />பெருமாள் முருகனின் முந்தைய நாவல்கள் எதையும் நான் படித்ததில்லை. எந்த முன் முடிவுகளுடன் நான் மாதொருபாகனை வாசிக்கவும் இல்லை. என் பார்வையில், பெருமாள் முருகன் சாதி எதிர்ப்பு என்ற எளிய விடைகளை (புத்திசாலித் தனமான உத்திகளைக் கொண்டு) இந்த நாவலில் முன்வைக்கவில்லை. மாதொருபாகன், சாதியமைப்பை விமரிசனம் செய்யவில்லை. கதைக்களனில் நிலவிய சாதியமைப்பை ஆரவாரமில்லாமல் ஆவணப்படுத்துகிறது. என் பார்வையில், அத்தகைய ஆவணப்படுத்தலே அத்தியாவசமான விமரிசனம் தான். <br />ஒரே பிரதி, வாசகனின் ரசனையை ஒத்து, பலவேறு விமரிசனங்களை உருவாக்குவது இயல்பே. நம்மிருவரின் பார்வையும் சற்றே வேறுபட்டாலும், ஒரு கறாரன விமரிசனத்தையும், அந்த விமரிசனத்திற்கான காரணங்களைத் தெளிவாக முன் வைத்ததும் நல்ல முன்னுதாரணங்கள்.<br /><br /><br />Raja Mhttps://www.blogger.com/profile/04602256219789552953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-30859157776965685032015-02-02T11:29:36.780+05:302015-02-02T11:29:36.780+05:30அன்புள்ள டி. தருமராஜ் அவர்களுக்கு,
உங்களது விளக்க...அன்புள்ள டி. தருமராஜ் அவர்களுக்கு,<br /><br />உங்களது விளக்கமான பதில், மாதொரு பாகன் குறித்து நீங்கள் செய்த விமரிசனத்தை எனக்குத் தெளிவு படுத்தியது. முதலில், இரண்டு விஷயங்களைச் சொல்லி விட்டு என் எண்ணத்தை எழுதுகிறேன்.<br /><br /> 'கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் போராட்டத்தில், பிரதியைப் புனிதப்படுத்துவதன் மூலம், ...போராட்டத்தையும் புனிதப்படுத்த வேண்டிய தேவை என்ன வந்தது?', என்ற கேள்விக்கே என்னைப் பொருத்த வரையில் இடமில்லை. அது முற்றிலும் அவசியமில்லை என்பதே என் கருத்தும். எந்தப் பிரதியையும் விமரிசனம் செய்யலாம் என்பதே உண்மையான கருத்துரிமை. மாதொருபாகனைப் புனிதப்படுத்துதல்ல என் பின்னோட்டத்தின் நோக்கம். <br /><br />இரண்டாவதாக, நான் வாசித்த அளவில் மாதொருபாகன் ஒரு நல்ல படைப்பாக எனக்குப் பட்டது. ஆனால், பெருமாள் முருகனின் கருத்துரிமைக்காக குரல் கொடுத்த தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் பலரும், மாதொருபாகனை , எந்த விளக்கமும் அளிக்காமல், மட்டையடியாக - 'தட்டையான நாவல்', என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு விதிவிலக்குகளாக இருந்தது, உங்களது விமரிசனமும், திரு. ராமசாமி (ஒத்திசைவு) அவர்களது விமரிசனமும் தான். அதனாலேயே உங்கள் இருவரின் விமரிசனம் எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் விமரிசனத்தில் இருந்து நான் எங்கே மாறுபடுகிறேன் என்பதை மட்டுமே என் பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன் (சரியாகச் சொல்லப்போனால், எழுத முயற்சித்திருந்தேன்).<br /><br />நீங்கள் எழுதியிருந்தபடி, பண்பாட்டுக் காரணிகளால் சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப் பட்டவர்களாக இருப்பவர்களும், ஒடுக்கப்பட்டவர்கள் தாம்; அவர்களுக்கும் இந்த விழாக்கால நெகிழ்வு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது என்ற வாதம் ஏற்புடையதே. <br /><br />நீங்கள் எழுதியது: 'தீண்டத்தகாத சாதிக்காரரோடு முயங்கிவிடும் ஆபத்து இருக்கிறதாகக் காளி விசனப்படுவது கைமீறிவிட்ட சூழலில் சொல்லப்படுகிற இறுதிக் குற்றச்சாட்டு தானே தவிர, அதுவே தான் அவனது பிரச்சினை என்று சொல்வதற்கு இல்லை.'<br /><br />அதுவே தான் அவனது பிரச்னை என்று சொல்வதற்கில்லையென்றாலும், அதுவும் ஒரு முக்கியமான பிரச்னையாக இருக்கிறது என்ற வாசிப்பிற்கான சாத்தியங்கள் நாவலில் இருக்கிறது என்றே எனக்குப் படுகிறது. நாவலில், இரண்டாம் கல்யாணம் பண்ணியும் குழந்தை பிறக்காவிட்டால், தன்னை வறடன் என ஊர் சொல்வது ஊர்ஜிதப்பட்டு விடுமே என்றஞ்சுவதும், பதினாலாம் நாள் திருவிழாவுக்கு போகிறாயா என்று கேட்டவுடன், "நீ சொன்னால் நான் போகிறேன்", என்று உடனே சொல்லிவிட்டாளே என காளி மருகுவதும், நாவலில் விரிவாகவே சொல்லப்படுகிறது. தன் ஆண்மையைப் பற்றிய கவலை காளிக்கு ஒரு முக்கியக் காரணம், என்பதில் சந்தேகமில்லை. <br />...Raja Mhttps://www.blogger.com/profile/04602256219789552953noreply@blogger.com