tag:blogger.com,1999:blog-5586114575800884909.post7495944762909766757..comments2022-06-12T11:40:14.272+05:30Comments on டி. தருமராஜ்: போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் – 5 அம்பேத்கரின் அதிகம் பேசப்படாத கட்டுரைtdharumaraj.blogspot.inhttp://www.blogger.com/profile/04723478441829193278noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5586114575800884909.post-32583807273464932202014-11-30T23:30:21.225+05:302014-11-30T23:30:21.225+05:30நன்றி. தலித் அரசியல் (உளவியல், வாழ்வியலும் கூட) பற...நன்றி. தலித் அரசியல் (உளவியல், வாழ்வியலும் கூட) பற்றி உணர்ச்சிவசப்படாத நிதானமான பார்வையுடன் முன்வைக்கப்படும் கருத்துகளை இணையத்தில் வெகு நாளாகத் தேடிக்கொண்டிருந்தேன். தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தங்கள் பழைய பதிவுகளயும் படித்து வருகிறேன். poornamhttps://www.blogger.com/profile/00460036269336248208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-89448769774604896172014-11-30T18:37:28.009+05:302014-11-30T18:37:28.009+05:30அன்புள்ள பூர்ணம்,
அகமணமுறையை வலுப்படுத்துவதற்காக ச...அன்புள்ள பூர்ணம்,<br />அகமணமுறையை வலுப்படுத்துவதற்காக சாதியமைப்பு கடைபிடித்த நான்கு சம்பிரதாயங்களில், முதலிரண்டு பெண்களுக்கும், பின்னிரண்டு ஆண்களுக்குமாக அமைந்திருந்தன. அவற்றுள் உடன் கட்டையும், ச ந் நியாசமும் நடைமுறைப்படுத்துவதற்கு சிக்கலான பரிந்துரைகள். அவற்றின் மாற்றுவடிவங்கள் தாம் - விதவைக்கோலமும், சிறு பெண்களை திருமணம் முடிப்பதும். 'உபரி பெண்களை' இந்த சமூகம் தேவையற்ற உறுப்பாகவே கருதி வந்தது. எனவே அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்குவதற்கு தயாரானார்கள். முடிந்தால் எரித்து விடுவது (இது அதீத நிலை), இல்லையென்றால் பயனற்ற பொருளாய் (?) மூலையில் விட்டெறிவது என்பதில் எந்த சிக்கலும் இல்லை.<br />ஆனால், மனைவியை இழந்த ஆண்களை இவ்வாறு அவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையாளமுடியவில்லை. அந்த ஆண் சமூகத்திற்கு எப்பொழுதுமே தேவையாக இருக்கிறான். எனவே அவனுக்கு ச ந் நியாசத்தைப் பரிந்துரைப்பதே கூட உச்சபச்ச வன்முறையாக (?) சமூகம் கருதியது. அதனால் தான் மிக எளிய முடிவாக, தன்னை விட அந்தஸ்தில் குறைந்த பிரிவிலிருந்து சிறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினர். <br />சதியும், ச ந் நியாசமும் தீவிர நிலைப்பாடாகவும், விதவைக் கோலமும், சிறு பெண்கள் திருமணமும் மிதமான நிலைப்படாகவும் சமூகத்தில் மாறியிருந்தது.<br />இதனாலேயே, நிறைய விதவைகள், நிறைய சிறு பெண் திருமணங்கள்.<br />உபரி பெண்களையும் உபரி ஆண்களையும் இந்த சமூகம் ஒன்றே போல் கருதவில்லை என்பதை நாம் ஞாபகத்தில் கொண்டால், ஏன் அவர்களுக்கிடையே திருமண ஒப்பந்தம் இல்லை என்பது விளங்கும்.<br />ஆண்கள் எப்பொழுதும் தங்களையே தங்களை மட்டுமே பூஜிக்கிற பெண்களைத்தான் மனைவிகளாக விரும்புகிறார்கள்.<br />தன்னிலும் கீழ் நிலையிலுள்ள சமுகப் பெண்களை திருமணம் முடிக்க விரும்புகிற உபரி ஆண், ஏன் சிறு பெண்களாகத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டுப் பார்த்தால், அந்த உபரி ஆண், உடலளவில் மட்டுமல்லாது (கற்பு) மனதளவிலும் அந்தப் பெண்கள் தூய்மையைப் பேண வேண்டும் என்று எதிர்பார்ப்பது விளங்கும்.<br />மேலும், உயர் குடி ஆண் (அவர் உபரியாக இருந்தாலு சரி) கீழ் குடி பெண்களின் பாலியல் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டிருக்கிறார் என்பதன் வெளிப்பாடு தான் சிறுமிகளாக அவர்களைத் திருமணம் செய்து கொள்வது.<br />சமூகம் தனது சம்பிரதாய விதிமுறைகளை எந்த சூழ் நிலையிலும் தளர்த்திக்கொள்வது இல்லை என்பதை நாம் கவனிக்கலாம். அதை ரகசியமாய் மீறிக்கொள்ளலாமே தவிர, வெளிப்படையாய் தளர்த்தும் பேச்சை சமூகம் என்றைக்கும் அனுமதிப்பதில்லை.<br />நீங்கள் எழுப்பிய கடைசி சந்தேகம், அம்பேத்கர் வட நாட்டு நிலவரங்களை அடிப்படையாக வைத்து.....? இக்கட்டுரையின் அடுத்த பகுதி வரைக்கும் காத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.<br />அதே போல், உயர் சாதிகள் இந்த சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பது போல், பிறர் கடைபிடிப்பது இல்லையே என்ற கேள்விக்கும் நீங்கள் கட்டுரையை தொடர்ந்து கவனியுங்கள் என்று தான் சொல்வேன். இந்தப் போலச் செய்தல் தானே கட்டுரையின் மையமே!<br /><br />டி. தருமராஜ்tdharumaraj.blogspot.inhttps://www.blogger.com/profile/04723478441829193278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-58261338824167043452014-11-30T13:35:26.025+05:302014-11-30T13:35:26.025+05:30 முதலாவது சதி என்பது அப்படியொன்றும் மிகப்பெரும் எண... முதலாவது சதி என்பது அப்படியொன்றும் மிகப்பெரும் எண்ணிக்கையில் (அதாவது ஆண்பெண் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தும் அளவு) நடந்ததாக சான்றுகள் இல்லை. <br />சாதியைக் காப்பாற்றுவது மட்டுமே சந்நியாசம்/ கைம்பெண் விதிமுறைகளின் நோக்கம் என்பதும் சரியாகப் படவில்லை. அதுதான் நோக்கமென்ற தர்க்கரீதியாகப் பார்த்தால் உபரி ஆண்களுக்கு சந்நியாசம், உபரிப்பெண்களுக்குக் கைம்பெண் விதிமுறைகள் என்றிருப்பதைவிட உபரி ஆண்கள் உபரிப்பெண்களை மட்டும் மணந்துகொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கலாமே?<br />தவிர உபரி ஆண்கள் எல்லாருக்கும் சந்நியாசம் என்ற நடைமுறை இருக்கவில்லையே? மனைவியை இழந்தவர்கள் வறிய நிலையிலுள்ள சிறுமிகளை மணந்தது மிகப்பெரும் அளவில் நடந்ததே?<br />மேலும் கைம்பெண் கோலக் கொடுமைகள் உயர்சாதிகளில் மட்டுமே அதிகமாயிருந்ததாகவும் கேள்விப்படிருக்கிறேன். அப்படியானால் மற்ற சாதிகள் இந்த சமநிலை பற்றிக்கவலைப்படவில்லை என்று பொருளா? <br />இன்னொரு முக்கியமான கேள்வி பெண்கள் பற்றாக்குறையாக இருந்த காலத்தில் கூட இந்தக் கைம்பெண் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகத் தெரியவில்லையே?<br />ஒரு வேளை அம்பேத்கர் அவர்களின் கட்டுரை வட நாட்டு நிலவரங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதோ?poornamhttps://www.blogger.com/profile/00460036269336248208noreply@blogger.com