tag:blogger.com,1999:blog-5586114575800884909.post8456084117322705542..comments2022-06-12T11:40:14.272+05:30Comments on டி. தருமராஜ்: மாதொருபாகன் நிகழ்வுtdharumaraj.blogspot.inhttp://www.blogger.com/profile/04723478441829193278noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5586114575800884909.post-63635220760094446512015-01-27T22:05:28.189+05:302015-01-27T22:05:28.189+05:30மாதொருபாகன் குறித்து - 2
இரண்டாவதாக, பெருமாள்முரு...மாதொருபாகன் குறித்து - 2<br /><br />இரண்டாவதாக, பெருமாள்முருகன் நாவலில் இன்னொரு கோணத்தையும் வைக்கிறார். அது குடியானவனின் வாழ்க்கையில் நிலவுடமைக்கு இருக்கும் செல்வாக்கைப் பற்றியது. நிலம் தன் வாரிசுக்குப் போக வேண்டும் என்பதில் அனைவரும் குறியாக இருக்கிறார்கள். நாவலில் வரும் காளியின் சித்தப்பாவின் பாத்திரம் இந்த ரீதியில் முக்கியமானது. அவர் சொத்தைத் தான் அவர் கூடப் பிறந்தவர்கள் குறி வைக்கிறார்கள். பிள்ளையில்லாதவனுக்கு சொத்து எதற்கு என்று கேட்கிறார்கள்? சித்தப்பாவிற்கும், சொத்தின் முக்கியத்துவம் நன்றாகத் தெரிகிறது. அதனால் தான், அதை உழுது பயிரிடா விட்டாலும், தனக்கென வாங்கி வைத்துக் கொள்கிறார். மதினிகள் அவருக்கு நாள் குறித்து ஒவ்வொருவரும் கறிச் சோறு போட்டு கவனித்துக் கொள்கிறார்கள் – சொத்து வேறெங்காவது போய் விடக் கூடாதென்று. அது ஏன் என்பதும் சித்தப்பாவிற்குத் தெரிகிறது. <br /><br />நாவலில் பல இடங்களில், “குழந்தையில்லாதவங்க எதுக்கு இப்படி சொத்து சேத்த அலையனும். நல்லா நாலு, துணி, மணி வாங்கி இருக்க வேண்டியது தானே?”, என்ற கேள்வியை பொன்னாவும், காளியும் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. “தன்” குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது தான் ஒரு “நல்ல” குடியானவனின் உச்சப்பட்ச சாதனை. ஒதுக்கமுடியாத கடமை. இரண்டையுமே பொருட்படுத்தாமல் இருக்கும் பாத்திரம் என்ற ரீதியில் காளியின் சித்தப்பா, காளிக்கு பிறிதொரு பாதையைக் காட்டுகிறார். காளியும் சரி, பொன்னாவும் சரி, அந்த வழி பிடித்திருந்தாலும், அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்களாக இல்லை. காளி தேர்ந்தெடுப்பதற்கு முன்னரே, அவன் பங்குகொள்ள முடிவை, அவனது குடும்பமும் /சமுதாயமும் எடுத்து விடுகிறது. இந்த ரீதியில், காளியின் சித்தப்பாவின் படைப்பு முக்கியமானதென்றே கருதுகிறேன்.<br />கதையில் நீங்கள் எழுதியுள்ள படி, “காளி வேறொரு பெண்ணை மணமுடிக்க விரும்பாத கணவன், சோர்ந்த மன நிலையொன்றில் இரண்டாவது யோசனைக்குத் தலையாட்டுகிறான்”, இல்லையே? காளி, சரியென்று சொல்வது, பண்டிகைக்கு மாமனார் வீட்டிற்கு போவதற்குத் தான், என்ற ரீதியில் தான் பெருமாள்முருகன் எழுதியுள்ளார். நீங்கள் காளியும், முத்துவும் உரையாடுவதை, “தண்ணியடித்து விட்டு பேசினாலும், சொல்ல வேண்டியதை முத்து சொல்லி விட்டான். அதை காளியும் ஏற்றுக் கொண்டு விட்டான்”, என அதை ஒரு இசைவதற்கான சமிஞ்சையாக கருதுகிறீர்களோ?<br /><br />பெருமாள் முருகன் “பண்பாட்டுத் தரவுகளில் வினோதங்களைக் கண்டறியும் மனோபாவம்”, என்று சொல்கிறீர்கள். இந்த வினோதங்களை, ஆதிக்க சமூகத்தை எதிர்க்கும் ஒரு “தலைகீழாக்க மன நிலை”யாக காணும் வழக்கமாகச் மானுடவியளாளர்கள் சித்தரிப்பதையும் ஒரு குறையான பார்வையாகத் தான் காண்கிறீர்கள். உண்மையைச் சொல்லப்போனால், “போலச் செய்தல்”, “பிழையான பிரக்னை”, என்ற கருத்தியலாக்கங்கள் மூலம் எளிய விளக்கங்களே முன் வைக்கப்படுகின்றன என்றும் சொல்கிறீர்கள். மிகச் சரியாக, இந்தத் 'தன்னிலை மறுப்பே' பண்பாட்டின் இன்றியமையாத குணமாகக் காணப்படுகிறது”. பெருமாள்முருகன், இந்தத் “தன்னிலை மறுப்பின்” பிரதி நிதியாகத் தானே பொன்னாவைப் படைத்திருக்கிறார்? சாதுர்யமாக யாருக்கும் தெரியாமல், விழாக்கால நெகிழ்ச்சியைப் பயன்படுத்தி, பொன்னா ஒரு குழந்தை பெற்றிருந்தால், அது ஒரு ஆணாதிக்கத்தை தந்திரமாக எதிர்கொள்ளும் ஒரு “தலைகீழாக்க மன நிலையின் வெளிப்பாடு”, என்று யூகிக்க வழி உண்டு. ஆனால், அதை பெருமாள்முருகன் செய்யவில்லையே? நீங்கள் சொன்னபடி, “தணற்குஞ்சுகளுக்குத் தாம் தணற்குஞ்சுகள் என்று”, தெரியாமல் இருக்கின்ற யதார்த்தம் தான் படைக்கப்பட்டிருக்கிறது.<br /><br />ஒரு தளத்தில் இந்த நாவல் நேர்கோட்டில் பயனிக்கும், எளிமையான நாவல். பல இடங்களில், “show don’t tell”, என்ற அடிப்படை கதை சொல்லும் விதியை பெருமாள் முருகன் கடைப்பிடித்திருக்கலாம். பாவாத்தாவின் பழங்குடி ஐதீகம் மாதொருபாகனாக மாறியது பற்றிய தளத்தை இன்னும் கொஞ்சம் விரித்துச் சொல்லியிருக்கலாம். காளியையும்/பொன்னாவையும் இன்னும் கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த கதைக் களனில் நிறுத்தியிருக்கலாம். ஆனால், எழுதப்பட்ட வகையிலேயே, இந்த நாவல் ஒரு அறுபதெழுபது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குடியாவனின் வாழ்க்கையை நம்பகத் தன்மையோடு படைத்துள்ளது. சாதிப் பற்று நம் சமூகத்தில் எவ்வளவு தூரம் உறையோடி இருக்கிறது என்பதை மலைப்பிரசங்கங்கள் இல்லாமல், அதிமனிதர்கள் இல்லாமல், கதையின் சாரமாக படைத்திருப்பதே பெருமாள்முருகனின் வெற்றி என நினைக்கிறேன். மாதொருபாகனை அவ்வளவு எளிதாக, மாற்றுக் குறைந்த படைப்பு, என ஒதுக்கி விட முடியாது.<br /><br />மாதொருபாகனுக்கு வந்த எதிர்ப்புகள் கருத்துச் சுதந்திர அழிப்புகளின் நீட்சி என நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.<br />Raja Mhttps://www.blogger.com/profile/04602256219789552953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-24542439543862391362015-01-27T12:07:58.798+05:302015-01-27T12:07:58.798+05:30மாதொருபாகன் குறித்து - 1
சிந்தனையைத் தூண்டும் பதி...மாதொருபாகன் குறித்து - 1<br /><br />சிந்தனையைத் தூண்டும் பதிவு. பெருமாள் முருகன், “நாவல் வழங்கும் சாத்தியங்களைப் புறக்கணித்திருக்கிறார்”, எனவும், “பண்பாட்டுத் தரவுகளில் வினோதங்களைக் கண்டறியும் மனோபாவம்”, கொண்டுள்ளார் என்றும் இரு கூரிய விமரிசனங்களை முன் வைத்திருக்கிறீர்கள். முதலில், நான் மானுடவியல் துறையைச் சார்ந்தவன் அல்லன் என்பதைச் சொல்லி விடுகிறேன். உங்கள் பதிவை படித்தவுடன் எழுந்த எண்ணங்களை மட்டுமே சொல்கிறேன்.<br /><br />முதலில், எந்த மாதிரியான சாத்தியங்களைப் புறக்கணித்திருக்கிறார் என்பதற்கு உதாரணங்களை அளித்துள்ளீர்கள், “… திருவிழாவின் இறுதி நாளன்று நிகழ்பவை அனைத்தும் 'பண்பாட்டின் அயர்ச்சி' தானே தவிர, அதன் சூட்சுமம் அல்ல. பண்பாடு அயர்ந்திருக்கும் இந்த வேளையை ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆண்கள் வெளிப்படையாகவும் பெண்கள் ரகசியமாகவும் பாலியல் சாகசத்தை மேற்கொள்ளலாம்; வஞ்சம் தீர்க்கலாம்; பழி வாங்கலாம். மரபாகச் செய்ய முடியாத எதையும் அன்றைக்கு செய்து விடலாம். அவரவர் கற்பனையையும் தேவையையும் பொறுத்தது இது (பாளையங்கோட்டை தசரா விழாவின் கடைசி நாளில் சாதிப் பழிவாங்கல்கள் நடைபெற்றன). இத்தகைய தருணங்களை ஒடுக்கப்பட்டவர்களே பெரும்பாலும் காத்திருந்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். குழந்தைப் பேறற்ற, அதற்கான மொத்தப் பழியையும் தப்பிதமாய் சுமந்து திரியும், 'மலடி' என்று பட்டம் சூட்டப்பட்ட பெண் விரும்பினால் இந்தப் பண்பாட்டு அயர்ச்சியை புத்திசாலித்தனமாய் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.”, என்று சொல்கிறீர்கள். அப்படிப்பட்ட நிலையை பொன்னா எடுக்க, அவள் தள்ளப்பட வேண்டுமானால், ““...ஒரு பெண்ணும் அவளது குடும்பமும் இந்த முடிவை எடுப்பதற்கு இன்னும் அநாதரவான சூழல் தேவைப்படுகிறது - தமிழ்ப் பண்பாட்டு வெளியில் அத்தகைய அநாதரவான சூழல், 'அவளது கணவன் வேறோரு திருமணத்திற்கு முயற்சிக்கிறான்' என்பதைத் தவிர வேறொன்றுமில்லை”, என்றும் சொல்கிறீர்கள்.<br /><br />பொன்னா, தன் கணவன் தன்னை விடுத்து இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விடுவானோ என்ற அச்சத்தால், பண்டிகைக் கால கலாசார நெகிழ்ச்சியை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள எத்தனிப்பவளாக நாவலில் சித்தரித்திருக்கலாம் என்று சொல்கிறீர்கள். சரி தானே? <br /><br />பழங்குடி வழிபாட்டின் உருவகமாக, பாவாத்தாவும், வரடிகல்லும் இருக்கின்றன. பாவாத்தா, மாதொருபாகன் ஆனதும், வரடிகல் ஐதீகம் பாண்டீஸ்வரர் ஆனதும் பழங்குடி வழிபாடு, புராணமயமாக்கப்பட்டு, வெகுஜன வழிபாடாகியது. காளி, அந்த வெகுஜன சமூகத்தின் பிரதி நிதி. அச்சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை முற்றிலும் உள்வாங்கிய, நிலவுடைமைக் குடியானவன். அவனும் சரி, பொன்னாவும் சரி, ஒடுக்கப்பட்டவர்கள் அல்லர். ஒடுக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் சமுதாய அயர்ச்சியை, பொன்னா பயன்படுத்திக் கொள்வாளோ என்பது தான் காளிக்கு உள்ள பெரிய அச்சம். <br /><br />காளியின் நண்பன் முத்துவிடம் பேசும் போது, <br />“நீ அந்தக் காலத்து ஆளாட்டமே பேசறீயடா. ஒரு பொம்பள சாதிக்குள்ள எத்தன பேர்கிட்ட போனாலும் தப்பில்ல. புழங்கிற சாதிக்காரன்ட்ட போனாக்கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டாச் சாதியோட போன அவ்வளவு தான். ஊர விட்டே, ஏன் சாதிய வுட்டே தள்ளி வைச்சிருவாங்க. இன்னைக்கு அப்படியா? சாதிக்குள்ளயே ஒருத்தனோடா தான் இருக்கனுங்கிறோம். அப்புறம் எப்பிடி? வீதியில சுத்தரதுல பாதிப் பேர் தீண்டாச்சாதித் தண்டுவப் பசங்க தான். அதுக்கப்புறம் பொன்னாள என்னால தொடவே முடியாது. கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்க முடியாது போ”, என்று தானே காளி சொல்கிறான்? (பக்கம் 118)<br /><br />இதில் இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, “அன்றைய தினம், குழந்தைப் பேறற்ற பெண்களுக்கு குழந்தை வரம் தரும் சடங்கு நிகழ்வது போன்ற மாயத்தோற்றத்தை நாவல் உருவாக்குகிறது”, என்று நீங்கள் சொல்வது போல் நாவலில் காளி கருதுவதில்லை. அது ஒரு ஐதீகம் மட்டுமே என்று அவனுக்கு நன்றாகவே தெரிகிறது. அங்கே பொன்னா போனாலும், குழந்தை பிறக்காதிருக்கலாம் என்பதும் அவனுக்குத் தெரிகிறது. சாதிக் கட்டமைப்பை முழுதாக உள்வாங்கியது தான் அவனது தலையாய பிரச்னை. <br /><br />... Raja Mhttps://www.blogger.com/profile/04602256219789552953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-39881467895265217432015-01-25T09:04:18.680+05:302015-01-25T09:04:18.680+05:30டி. தருமராஜ் குறிப்பிடும் கார்னிவெல் மனோபாவம் உண்ம...டி. தருமராஜ் குறிப்பிடும் கார்னிவெல் மனோபாவம் உண்மையானது. ஒருவிருந்திலோ களியாட்டத்திலோ மற்றவன் பொண்டாட்டியை சேர்ந்தாட அழைப்பதுவும், அவர்கள் செய்யப்போகும் சில்மிஷங்களை அனுமதிப்பதும் / பொறுத்துக்கொள்வதுவும் இன்றுவரை தொடர்வதுதான். பண்பாட்டு அளவுகோலை எல்லாவிடத்திலும் செலுத்திவிடமுடியாது. இப்படைப்புக்குள் நாவல்தரும் சாத்தியங்களை பெ.முருகன் சரிவரப்பயன்படுத்தவில்லை என்பதுவும் நிஜமே. பொன்னாவுக்கு பிள்ளை ஒன்றைப்பெற்றுக்கொள்வதுதான் நோக்கம் என்றால் திருச்செங்கோட்டுக்கோவில் திருவிழாவில் அவள் அதைச் சாதித்துக்கொள்வதாக அமைத்திருக்கலாம். குழந்தைப்பேறில்லாத பெண்களை கருத்தரிக்கவேண்டி ஒரு குடும்பமே அனுப்பிவைப்பதான வழக்கத்தைத் தன் ஆய்வுகளால் பெ.முருகனாலோ வேறொருவரினாலோ நிறுவமுடிகிறதோ இல்லையோ இங்கே பொன்னாவின் அப்பனும் ஆத்தாளும் அத்தையும் அண்ணாவும் சேர்ந்து அவளை அனுப்பிவைப்பதானது ஒரு கிடாரியை சினைப்படுத்து நிலையத்துக்கு தள்ளிப்போவதைப்போல இருந்ததுடன் படிப்போரை நெளியவும் வைத்தது. தவிர எழுதுபவனின் கருத்து சுதந்திரம் அதற்கான போராட்டம் முன்னெடுப்புகள் படைப்புக்கு வெளியான விஷயங்கள்.karunaharamoorthy.phttp://www.pathungukuzi.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-68215156765846064652015-01-25T08:39:53.634+05:302015-01-25T08:39:53.634+05:30wonderful sir... i also thank mr dalawaai sundram ...wonderful sir... i also thank mr dalawaai sundram for making me read this... sharing<br />nateshhttps://www.blogger.com/profile/15456381815142399584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-43831772726771896982015-01-24T15:35:49.360+05:302015-01-24T15:35:49.360+05:30மிக அருமையான அலசல்.மிக அருமையான அலசல்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.com