வருகிற 28-12-2015 முதல் 28-02-2016 வரை, ஜெர்மனியிலுள்ள ஜார்ஜ் - ஆகஸ்ட் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்கு வருகைதரு பேராசிரியராக செல்கிறேன். நாட்டுப்புறவியல் கல்விப்புலம் இந்த நகரிலிருந்தே தொடங்கியது. ஜெர்மானிய நாட்டுப்புறக்கதைகளையும் தொன்மங்களையும் தொகுத்து வெளியிட்ட கிரிம் சகோதரர்கள் பேராசிரியர்களாக பணியாற்றிய பல்கலைக்கழகம் இது. இங்கு வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் தங்களது முதல் தொகுதியை வெளியிட்டார்கள். பின்னாட்களில் அரசை எதிர்த்து கலகம் விளைவித்த பேராசிரிய குழுவில் முக்கிய பங்கினை வகித்தார்கள் என்பதும் வரலாறு. இந்தப் பல்கலைக்கழகத்திற்கே பணியாற்ற செல்கிறேன். நாட்டுப்புறவியலின் தொடக்க புள்ளியை நோக்கி ஏதோ ‘யாத்திரை’ செல்வது போல இருக்கிறது!!! கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தின் ‘நவீன இந்திய ஆய்வுகளுக்கான மையம்’ மூலமாக ‘ஒடுக்கப்பட்டவர்களின் சமயம்’ என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க இருக்கிறேன். பெளத்தம் தொடங்கி நாட்டுப்புற தெய்வங்கள் ஈறாக ஒவ்வொரு சமயக்கூறுகளையும் சாமானியர்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டார்கள் என்பதை விளக்கும் பாடத்திட்டம் இது. ஜெர்மன