இன்று காலையில் நான் யோசித்திருக்கக்கூடாது. பேசாமல் சென்னைப் புத்தகத் திருவிழாவிற்குப் போயிருக்கவேண்டும். வழக்கமாய் காலைகளில் நான் யோசிப்பது இல்லை. அந்நேரம் தான் எல்லோரும் யோசிக்கிறார்கள் என்பதால், ட்ராபிக் அதிகமாகவே இருக்கும். ஆளுக்கு ஆள் குறுக்க மறுக்க போய்க் கொண்டிருப்பார்கள். அதனால் எப்பொழுதும் தவிர்த்து விடுவேன். ஆனால், இன்றைக்கு என்னவோ இப்படி ஆகி விட்டது. முதலில் இந்த வரி மட்டும் தான் தோன்றியது - ‘சாதி, ஒரு பேச்சு!’ என்னடா இது வம்பு என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதன் அடுத்த வரி வந்து விழுந்தது - ‘சாதி எதிர்ப்பு, ஒரு இரைச்சல்!’ கூடவே மூன்றாவது வரியும் - ‘பிராமணியமோ காட்டுத்தனமான மெளனம்.’ மூன்றையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது பயம் வந்தது. ‘சாதி ஒரு பேச்சு; சாதி எதிர்ப்பு இரைச்சல்; பிராமணியம் மெளனம்.’ உடனே, ’இந்த நூற்றாண்டின் எதிர்ப்பு அரசியல், இரைச்சலுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பது தானா?’ என்றேன் நான். நான் கேட்டதைக் கண்டு கொள்ளாமல், ‘பிராமணியத்தின் மெளனமும், பேச்சிற்கிடையிலான மெளனம் இல்லை; அது இப்பொழுது எழுத்தில் உருவாகும் மெளனம்!’ என்றேன் நான். ‘அப்படிய