Skip to main content

Posts

Showing posts from 2019

தமிழில் சிந்தித்தலும் தருமராஜின் எழுத்தும்

சிந்தனையே மொழியில் தான் நிகழ்கிறது எனும்போது, ‘தமிழில் சிந்திப்பது’ என்று தனியாக என்ன இருக்கிறது எனத்தோன்றலாம்.  இருப்பது போலத்தான் தெரிகிறது.  ஒரு மொழிச்சூழலில் சிந்திப்பது அச்சூழலின் அறிதல், அறியாமை இரண்டின் பயனாலாகிறது.  ஒரு உதாரணமாக இசை குறித்து தமிழில் சிந்தித்தலை எடுத்துக் கொள்வோம். இது பல்வேறு சிக்கல்களைத் தாங்கியது. இசையை ரசிப்பவர்கள், கற்றுக்கொள்பவர்கள், கோட்பாட்டாளர்கள், கலைஞர்கள் என அனைவரையும் வஞ்சனையில்லாமல் பாதிப்பது.  இசையைப் புரிந்துகொள்ளவே முடியாது என்பதில் துவங்கி இசையே தெய்வீகம், அல்லது மரபு, செவ்விசையாக அறியப்படுவது என, இங்கே நிலவும் பலநூறு திரைகளைக்  கடந்து இசையை சிந்தித்தல், உரையாடுதல் அனைவருக்குமே சிக்கலானதாகிறது. ஒரு ஒப்பீடிற்கு, Schoenberg, Hindemith, Rosen, Tovey போன்றோருக்கு இசையின் தெய்வீகம் பற்றியோ, சாதியச் சிக்கல் பற்றியோ, இசை மரபுகள் பற்றியோ இந்த அளவிற்கு  சம்பந்தம் இல்லை. அவர்களுடைய இசைக்கோட்பாட்டு எழுத்துக்கள், ஒலியின் பௌதீகத்தில் துவங்கி நேரடியாக இசை கட்டுமானங்களுக்குள் செல்பவை. ஆனால் ஒருவேளை அவர்கள் தமிழில் இசைகுறித்து தமிழர்களுக்கு (இசைக் கல

தமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்

(விரைவில் வெளிவரவிருக்கும் 'ஜல்லிக்கட்டு: கொந்தளிப்பின் அரசியல்' என்ற நூலின் ஒரு அத்தியாயம் இந்தக் கட்டுரை.  நவம்பர் 7ம் தேதி, இந்து தமிழ் திசையில் வெளியானது.  அதன் முழுமையான வடிவம் இங்கே.) புதுமைப்பித்தன் கேலி பேசிய ‘தமிழ்க் குரங்கு’ போல இது என்ன ‘தமிழ் அரவம்’ என்று பயப்பட வேண்டாம். அரவம், உண்மையாய்ச் சொல்லுகிறேன், ரொம்ப நல்ல வார்த்தை.  ‘அரவம் நல்லது’ என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.  அரவம் என்றால் பாம்பு; அரவம் என்றால் ஆரவாரம் (அரவம் ஜாஸ்தியா இருக்கே!); அரவம் என்றால் மெல்லிய ஓசை என்றும் பொருள் (வந்து போன அரவமே இல்லை); பேச்சுவழக்கில் அரவம், அருவமாகியும் விடுகிறது (அருவமில்லாம வந்துட்டு போயிட்டான்!); சமஸ்கிருதத்தில் அரவம் என்றால் ஓசையின்மை என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் மேலே, அரவம் என்றால் தமிழர் என்றும் பொருள்.   தமிழர் என்ற அடையாளத்தை மொழி கொண்டு மட்டுமே தீர்மானித்துக் கொண்டிருக்கும் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் அதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது என்று சொல்வதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.   ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு, அது அரவம்!’ என்று த

கபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்? - Uncut

வெற்றிமாறன் இயக்கி , தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ‘ அசுரன் ’ திரைப்படம் சில புதிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது .   அசுரன் ஒரு நவயுகப் படம் .  அண்மைக்காலமாக , சாதியால் ஒடுக்கப்பட்டவர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டு திரைப்படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன .  இதுவொரு பாராட்டத்தக்க முயற்சி .  பா . ரஞ்சித்தின் திரைப்படங்கள் இதற்கானத் தொடக்கப்புள்ளி என்று சொல்ல முடியும் .   திரைப்பட வரலாற்றறிஞர்கள் இதை மறுக்கக்கூடும் .  ரொம்ப காலத்திற்கு முன்னாடியே இது ஆரம்பித்து விட்டது என்று ஆதாரங்களைக் காட்டக்கூடும் .  ஆனால் , சாதியால் ஒடுக்கப்பட்டவன் கதாநாயகனாக மாறுவதற்கு முதலில் தான் ‘ தாழ்த்தப்பட்டவனே ’ என்பதை துணிவாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் .  அந்த வகையில் , நான் அட்டவணைச் சாதி தான் என்று துணிந்து சொல்கிற , சாதி விடுதலைக்காகப் போராடுகிற நாயகத் தன்மையை ரஞ்சித்தே ஆரம்பித்து வைக்கிறார் . அந்த ஆரம்பம் , மாரி செல்வராஜ் , வெற்றிமாறன் என்று தொடர்கிறது .  இந்த வகைப் படங்களை ‘ தலித் சினிமா ’ என்று வகை