Skip to main content

Posts

Showing posts from September, 2020

எழுத்தாளனின் மரண ஆசை!

(பாடகர் SPBயின் மரணத்திற்கு தமிழகம் அடைந்த கிளர்ச்சி கண்டு சாரு நிவேதிதா வருத்தப்பட்டிருந்தார்.  அதன் பின், வழக்கம் போல், சாரு குறித்து நிறைய பேர் வருத்தப்பட ஆரம்பித்தனர்.  எழுத்தாளர்கள் ஏன் மரணம் குறித்து அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்பது நீண்ட நாள் கேள்வி.  ஏனெனில், எழுத்தே மரணம் தான் என்பது நீண்ட நாள் பதில்.) எழுத்தாளராவது தான் எனது முதல் கனவாக இருந்தது .   அப்பொழுதே , எப்படி இறந்து போக வேண்டும் என்றும் கற்பனை செய்திருந்தேன் .   இதுவொரு இரட்டைக் கனவு .   எழுத்தாளராக விரும்புகிற ஒவ்வொருவருக்கும் பிரத்யோகமான மரண ஆசையும் இருக்கிறது .   என்னவொன்று , மரண ஆசையை மட்டும் கடைசி வரை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள் .      மரண ஆசை என்றதும் , தற்கொலைக்கான வேட்கை என்றெல்லாம் நினைத்து விசனம் கொள்ள வேண்டாம் .   தற்கொலையைத் தவிர்ப்பதற்காகத் தானே எழுதவே ஆரம்பிக்கிறார்கள் .   அப்படித் தவிர்த்த பின்பும் மரணம் அவர்களை விடுவதாய் இல்லை .   தங்களைப் பற்றி கிளுகிளுப்பாக எதையாவது கற்பனை செய்யச் சொல்கிறது .   இதைத் தான் மரண ஆசை என்று சொல்கிறேன் .   கிளுகிள