மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘கர்ணன் ’ திரைப்படத்தின் பாடலொன்று நேற்று வெளியாகியுள்ளது. கண்டா வரச்சொல்லுங்க… அதற்குப் பயன்படுத்தப்பட்ட காட்சி வடிவங்கள் அற்புதமானவை. பாடல் நெடுக, ஒரு மனிதன் எரிந்து கொண்டிருக்கும் தீப்பந்தம் கொண்டு சுவரில் ஓவியம் வரைகிறான். நெருப்பால் ஓவியத்தைச் சுட்டால் என்ன ஆகும்? காகிதமும் சீலையுமே ஓவிய ஊடகங்கள் என்ற கடந்த சில நூற்றாண்டு மயக்கத்தைக் கடந்து யோசிக்க முடிந்தால், தீ நாவே ஆரம்ப கால வண்ணம் என்பது நமக்கு புலப்படும். பந்தமே, ஆதித் தூரிகை. அந்த வகையில், ’ எரிந்து கொண்டிருக்கும் பந்தத்தின் சிறு நுனியில் எரிந்து முடிந்த சுடு கரி ’ என்ற யோசனை மிகப் பிரம்மாதமான கற்பனை. ‘சமகாலக் கலை ’ (contemporary art) என்று ஏதாவது பேசப் புகுந்தால் இதுவொரு கச்சிதமான உருவமாக செயல்பட முடியும். கலை வடிவங்கள் எப்பொழுதுமே எரிந்து அவிந்த கரித்துண்டுகளால் செய்யப்படுபவை என்றொரு மூடநம்பிக்கை நம்மிடம் உண்டு. அதன் மறுபக்கம், கனன்று கொண்டிருக்கும் நெருப்பு எதையும் படைத்து விடாது என்பதும் நமது இன்னொரு மூடநம்பிக்கை. தீயும் கரியும், இரண்டு வெவ்வேறு மனநிலைகளையும், சந்தர்ப