‘நீ என்ன சாதின்னு யாராவது கேட்டா, மூஞ்சில அடிக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லனும். என்ன சொல்லலாம்’ என்றான், முன்பொருமுறை திருமாறன். சிறுசிலிருந்து நண்பன். நாடக நடிகன். பெரியார் ஆதரவாளன். திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டான். எங்கிருக்கிறான் … இருக்கிறானா என்று கூட யாருக்கும் தெரியாதவன். அவன் கேட்ட கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை. ‘சரி, நீ என்ன சொல்லுவ?’ என்றான். ‘அப்படி யாராவது கேட்டா, நான் உண்மைய சொல்லுவேன். அதுவே மூஞ்சில அடிச்சா மாதிரி தான் இருக்கும்’. அன்றைக்கு, அவன் கண்களில் பொறாமை தெரிந்தது. என் ‘சாதி மறுக்கப்பட்ட’ அடையாளம், கேட்கிறவர் மூஞ்சை பெயர்க்கும். ஒரு தலித்தாக பிறந்ததில், நான் அனுபவித்த ஒரே சலுகை இது தான்! ***** தொடர்ச்சியான சாதிக் கொலைகளால் எல்லாருமே பதறிப் போயிருக்கிறோம். நிறைய பேருக்கு உயிரோடிருப்பது குறித்த பயம்; பலருக்கு இன்னும் உயிரோடு இருக்கிறோமே என்ற கசப்பு. குழம்பிப் போயிருக்கிறது சூழல். ‘நான் உயர்சாதியைச் சார்ந்தவள்; ஆனால், ஆணவக் கொலையை எதிர்க்கிறேன்’ என்ற அறிவிப்பைக் கூட இப்படி பதட்டப்பட