9 காணி வீடு டி . டி. ரமேஷ் ராஜா வீடு என்பது ஒரு கனவாக , ஒரு சிலருக்கு கோவிலாக . அரணாக மேலும் சிலருக்கு ஒரு லட்சியமாகக் கூட விளங்குகிறது . இவ்வாறான மதிப்பீடுகள் சமவெளியில் நேர்கோட்டில் இயங்கும் நமக்கு பொதுவானது . ஆனால் காணி மக்களுக்கு வீடு என்பது தற்காலிகமான ஒன்று மட்டுமே . நம் வாழ்வு முழுவதுமாக வீடு என்ற குறியீட்டால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சம காலத்தில் , காணி வீடு மாத்திரம் மதிப்பீடுகளை உதறி நிற்பதன் அர்த்தம் என்ன? காணி வீடு என்ன சொல்கிறது . காணிக்காரர்கள்: தமிழ்நாட்டின் தென்மேற்கே காணப்படும் பொதிகை மலையில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் 'காணிக்காரர்கள்' . தற்சமயம் இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அகத்தியர் காணி குடியிருப்பு , சின்ன மயிலாறு , பெரிய மயிலாறு , சேர்வலாறு , இஞ்சிக்குழி ஆகிய இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை , விளவங்கோடு , கற்குளம் ஆகிய இடங்களிலும் வாழ்கின்றனர் . இதில் 'தற்சமயம்' என்ற சொல் காணி மக்களின் செங்குத்துக் கோட்டியக்கத்தை அர்த்தப்படுத்துகிறது . இது சமவெளியின் நேர்கோட்டியக்கத்திற்கு எதிரானது . பொதிகை மலையில் பல