Skip to main content

சாதி - மொழி – சமயம் 4: அடையாளங்கள் குறித்து அயோத்திதாசர்



அயோத்திதாசரின் சாதி – மொழி – சமயம் தொடர்பான கருத்துகளிலிருந்து நான் கீழ்கண்ட வாக்கியங்களைத் தருவித்துக் கொள்கிறேன்:


நமக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமே உண்மையை நெருங்க முடியும்.

'இலட்சணம்', 'அந்தரார்த்தம்', 'விவேக விருத்தி', 'சாதித்தல்' போன்ற தமிழ் கருத்தாக்கங்களை உருவாக்கிய தன்மை.

மொழி குறித்து புதிய பார்வையை முன்மொழிந்தது (சொற்கள், வாக்கியங்கள்!).

'சாதி' என்று நாம் நம்பிக்கொண்டிருப்பது கட்டுக்கதை என்ற வாதம்.

பிராமணர்கள் திரிபு வாதங்களை ஏற்படுத்தினார்கள் என்ற தகவல்.

இந்திய வரலாறு, பிராமணர்களுக்கு முன், பின் என்று பார்க்கப்பட வேண்டியதன் அவசியம்.

பிராமணியம் இந்திய சமூகத்தை எவ்வாறு தனது திட்டத்திற்குள் கொண்டு வந்தது என்ற யோசனை.

பிராமணியமயமாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள் எவ்வாறு 'தீண்டத்தகாதவர்களாக' மாற்றப்பட்டார்கள் என்ற விவரம்.

பிராமணிய எதிர்ப்பு மட்டுமல்ல, பிராமணிய நீக்கமும் தேவை என்ற யோசனை.

பிராமணிய நீக்கம், வேறொரு தத்துவத் தடத்தை கட்டமைப்பதன் மூலமே சாத்தியம் என்ற முடிவு.

(முற்றும்)

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும...