Skip to main content

சாதி - மொழி – சமயம் 4: அடையாளங்கள் குறித்து அயோத்திதாசர்



அயோத்திதாசரின் சாதி – மொழி – சமயம் தொடர்பான கருத்துகளிலிருந்து நான் கீழ்கண்ட வாக்கியங்களைத் தருவித்துக் கொள்கிறேன்:


நமக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமே உண்மையை நெருங்க முடியும்.

'இலட்சணம்', 'அந்தரார்த்தம்', 'விவேக விருத்தி', 'சாதித்தல்' போன்ற தமிழ் கருத்தாக்கங்களை உருவாக்கிய தன்மை.

மொழி குறித்து புதிய பார்வையை முன்மொழிந்தது (சொற்கள், வாக்கியங்கள்!).

'சாதி' என்று நாம் நம்பிக்கொண்டிருப்பது கட்டுக்கதை என்ற வாதம்.

பிராமணர்கள் திரிபு வாதங்களை ஏற்படுத்தினார்கள் என்ற தகவல்.

இந்திய வரலாறு, பிராமணர்களுக்கு முன், பின் என்று பார்க்கப்பட வேண்டியதன் அவசியம்.

பிராமணியம் இந்திய சமூகத்தை எவ்வாறு தனது திட்டத்திற்குள் கொண்டு வந்தது என்ற யோசனை.

பிராமணியமயமாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள் எவ்வாறு 'தீண்டத்தகாதவர்களாக' மாற்றப்பட்டார்கள் என்ற விவரம்.

பிராமணிய எதிர்ப்பு மட்டுமல்ல, பிராமணிய நீக்கமும் தேவை என்ற யோசனை.

பிராமணிய நீக்கம், வேறொரு தத்துவத் தடத்தை கட்டமைப்பதன் மூலமே சாத்தியம் என்ற முடிவு.

(முற்றும்)

Comments

Popular posts from this blog

அம்பேத்கரின் 'தீண்டாமையின் தோற்றம்'

('தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?' என்ற கட்டுரையை முழுமையாக விளங்கிக் கொள்ள இந்தக் கட்டுரை உதவி செய்யும்.  2007ல் எழுதப்பட்ட இக்கட்டுரை, 'அம்பேத்கரின் பன்முகம்' என்ற நூலில் இடம்பெற்றிருந்தது.) தீண்டாமையின் வேர்கள் குறித்து அம்பேத்கர் மேற்கொண்ட ஆய்வுகள் மிகச் சுருக்கமானவை என்றாலும் , தீவிரமான விவாதப் புள்ளிகளை உள்ளடக்கியவை. ' சாதி ' குறித்துப் பரந்த அளவிலும் , தீண்டாமை ', ' வர்ணம் ', ' விலக்கல் ', ' தீட்டு ' என்று குறிப்பாகவும் பல்வேறு வகையான ஆய்வாளர்களால் , வெவ்வேறு தருணங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட சாதிய ஒழுங்கமைப்பு என்ற சொல்லாடலை இரண்டு வகை என்று சொல்ல முடியும். ' சாதி ' என்ற காரணியை அதன் வரலாற்றுத் தன்மையோடும் , நடைமுறை வெளிப்பாடுகளோடும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆய்வாளர்களால் கட்டமைக்கப்பட்ட சொல்லாடலை முதல் வகை என்று கொள்ளலாம். இவ்வகை ஆய்வாளர்களிலிருந்து திட்டவட்டமாக வேறுபடுகிற இரண்டாம் வகையினர் , சாதியத்தின் வேர்களையும் , நடைமுறைச் சிக்கல்களையும் அலசுவதோடு நிற்காமல் , ' சாதி ' யை அழித்தொழிக்கு...

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

வேற்றுமெய்யும் வேற்றுமையும்