Skip to main content

யானை காடாகிறது!

நான் ஏன் தலித்தும் அல்ல நூல் மதிப்புரைக்கான டீஸர்!!!!
பவணந்தி, என்னோடு ஜேயென்யு வில் படித்தவர். 'நான் ஏன் தலித்தும் அல்ல' நூல் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். நூலிற்கான மதிப்புரையை எழுதி முடித்து விட்டார் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாகவும், பரபரப்பாகவும் இருக்கிறது.
தமிழில் நான் பொருட்படுத்தக் கூடிய ஒரு சில நபர்களில் பவணந்தி முக்கியமானவர். அவரது மதிப்புரைக்கான டீசர் இது!
மதிப்புரையை வாசிக்கக் காத்திருக்கிறேன்.



பவணந்தி

ஒருவழியாக நண்பர் தருமராஜின் நான் ஏன் தலித்துமல்ல நூலுக்கான எனது மதிப்புரையை எழுதி முடித்துவிட்டேன்.

நீண்ட நாட்களாக முழுமையுறாமலே இருந்து வந்த ஒன்று; மிகச் சுருக்கமாக இங்கே: 

உங்களுக்கு எப்படியோ? தெரியாது! 

ஆனால் எனக்கு இது யானையைப் பற்றிய ஒரு நூல்; இன்னும் சொல்லப் போனால் இது ஒரு யானையைப் பற்றிய நூல்; சில நேரங்களில் இது யானைகளைப் பற்றிய நூலாகவும் இருக்கக் கூடுமென்ற மயக்கம் ஏற்படுகிறது. 

அநேகமாக வாசிப்பின் மயக்கமாக இருக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம்; எங்கு பார்த்தாலும் சிங்கத்தைப் பற்றியே பேச்சாய் கிடக்கும் மதுரையில் யானையைப் பற்றி பேசுவதென்பது பெரிய மாற்றம் தான்; 

காட்டுக்கு யானை ராஜாவாவது பற்றியதல்ல இந்நூல்; மாறாக யானை காடாகவே மாறிப்போவது. அதனால் தானோ என்னவோ நூலின் முகப்பிலேயே யானை காணாமல் போய்க்கொண்டிருப்பதாக சொல்லியாகிவிட்டது. 

இப்படி யானை காணாமல் போவது சிங்கத்திற்குக் கொண்டாட்டம் எனவும் சிலரால் எச்சரிக்கப்பட்டாகியும் விட்டது; 

இருந்தும் ஒன்றை மட்டும் இங்கு எதேட்ச்சையாய்ச் சொல்லிவிடத் தோன்றுகிறது; 

கண்டிப்பாகச் சிங்கத்திற்குத் தெரிந்தேதானிருக்கும் – 

யானை காடாகும் போது அக்காட்டின் அங்கமாயிருக்கும் தான் என்னவாவோம் என்று!!!

Comments

Popular posts from this blog

அம்பேத்கரின் 'தீண்டாமையின் தோற்றம்'

('தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?' என்ற கட்டுரையை முழுமையாக விளங்கிக் கொள்ள இந்தக் கட்டுரை உதவி செய்யும்.  2007ல் எழுதப்பட்ட இக்கட்டுரை, 'அம்பேத்கரின் பன்முகம்' என்ற நூலில் இடம்பெற்றிருந்தது.) தீண்டாமையின் வேர்கள் குறித்து அம்பேத்கர் மேற்கொண்ட ஆய்வுகள் மிகச் சுருக்கமானவை என்றாலும் , தீவிரமான விவாதப் புள்ளிகளை உள்ளடக்கியவை. ' சாதி ' குறித்துப் பரந்த அளவிலும் , தீண்டாமை ', ' வர்ணம் ', ' விலக்கல் ', ' தீட்டு ' என்று குறிப்பாகவும் பல்வேறு வகையான ஆய்வாளர்களால் , வெவ்வேறு தருணங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட சாதிய ஒழுங்கமைப்பு என்ற சொல்லாடலை இரண்டு வகை என்று சொல்ல முடியும். ' சாதி ' என்ற காரணியை அதன் வரலாற்றுத் தன்மையோடும் , நடைமுறை வெளிப்பாடுகளோடும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆய்வாளர்களால் கட்டமைக்கப்பட்ட சொல்லாடலை முதல் வகை என்று கொள்ளலாம். இவ்வகை ஆய்வாளர்களிலிருந்து திட்டவட்டமாக வேறுபடுகிற இரண்டாம் வகையினர் , சாதியத்தின் வேர்களையும் , நடைமுறைச் சிக்கல்களையும் அலசுவதோடு நிற்காமல் , ' சாதி ' யை அழித்தொழிக்கு...

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

வேற்றுமெய்யும் வேற்றுமையும்