Skip to main content

'அயோத்திதாசரை' வாசித்து அறிவது நம் அனைவரின் தேவை - முகம்மது யூசுப்

" அயோத்திதாசர் "
டி.தருமராஜ் அவர்களின் நூலின் வாயிலாகத்தான் முதன் முதலாக அயோத்திதாசரை என் வாசிப்பில் வழி அறிகிறேன் என்ற கூச்சத்துடன் தான் ஆரம்பம் செய்ய வேண்டியுள்ளது.


நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே வேக வேகமாகச் சென்று தமிழ் கூறும் நல் உலகின் அறம் பேசும் அறிவுஜீவிகளின் இலக்கிய பெட்டகமான " அழியாச் சுடர் " எனும் பக்கம் சென்று காநாசு லாசரா குபரா இன்னும் என்னென்னமோ பெயர்களுக்கு இடையில் அயோத்திதாசர் பெயரைத் தேடினேன். நான் நினைத்தது போலவே இல்லை. அப்போ, அந்த அழியாச்சுடர் பெரும்பான்மை வரிசையை நான் வெறுப்பதில் தப்பே இல்லை என நினைத்துக் கொண்டேன். 
காலம் முழுவதும் தமிழில் எழுதிக் கொண்டு இருந்தவரை, நீண்ட நாட்கள் சிற்றிதழ் நடத்தியவரை எந்த ஒரு அடையாளமும் இன்றி சுருட்டி கசக்கி தூர எறிந்து விட முடியுமா. 
முடியும்.. நீங்கள் உயர்ஜாதி அல்லது இடைஜாதிக்குள் இல்லாதபட்சத்தில். 
உண்மையில் சொல்லப்போனால் இந்த நூல் சார்ந்து ஒங்கொம்மா ங்கொத்தா என்று தான் திட்டி எழுத வேண்டும் . 
ஆனாலும் பாருங்கள் இன்டலெக்சுவல் சமுதாயம் ஆண்ட பரம்பரை வேறு, சரி என்ன செய்ய மனதை இறுக்கமாக்கிக் கொண்டு " நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் " என்று தான் வருத்தத்தை வெளிக்காட்டாமல் பேச வேண்டியுள்ளது. 
" முதற் பதிப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை " என்ற தலைப்பில் இந்த நூலில் 19 பக்கத்தில் இருந்து 32 வரை உள்ளதை வாசித்து விட்டு நீண்ட நேரம் அமைதியாக புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அமர்ந்திருந்தேன். குப்பைத்தொட்டி அருகில் வீசப்பட்ட ஒரு அனாதைக் குழந்தையின் அழுகுரல் போல அந்த முன்னுரையின் வலி நெஞ்சை அழுத்துகிறது. 
                                        முகம்மது யூசுப்
அவர் முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கும் தலித் தலித் என்ற வார்த்தைகளை அகற்றி விட்டு அவற்றில் எல்லாம் இஸ்லாமியன் என்ற வார்த்தை இட்டு நிரப்பினாலும் எந்த சேதாரமும் இன்றி அதே அழுகைக்குரல் கேட்கும் வாய்ப்பு இருந்ததினால் என்னவோ வலியின் பாரம் இன்னும் கூடுதலாக உணர்த்தேன். 
எழுதுவதற்கான காரணங்கள் குறித்து ஏராளமாக பேசப்பட்டுள்ளன என ஆரம்பிக்கும் எழுத்தாளர் பொது வாசகப்பார்வையில் இருந்து தலித் பார்வை எவ்வாறு மாறுபடுகிறது. அதாவது அவதூறுகளுக்கு எதிரான எழுத்து முறையை ஏன் அவர்கள் தேர்வு செய்கிறார்கள். அது திணிக்கப்படுதல் என்பதை மிக வலியோடு பதிவு செய்கிறார். 
தமிழ் எழுத்துலகில் இருவரைப் பற்றி உங்கள் மனம் போன போக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஒன்று கடவுள் மற்றொன்று தீண்டத்தகாதவன் என்று கூறி ஆசிரியர் ஒரு பட்டியல் இடுகிறார். இப்படி எல்லாம் நீங்கள் பூசி மொழுகி எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசலாம் என்று. ( அவர் வகைமைபடுத்தி இருப்பது அனைத்தும் நிஜத்தில் மற்ற அனைவரின் பயன்பாட்டில் உள்ளவை என்பது வருத்தமளிக்கக் கூடிய ஒன்று)
1982 சென்னை மஹாஜன சபை கூட்டத்தில் இருந்து நீண்ட பயணம் தொடர்கிறது நூலில். 
வைதீக சமயங்கள் எல்லாம் மரபு பண்பாடு என்ற பெயரில் நிகழ்த்தியது அனைத்தும் ஜாதிய கட்டமைப்பே. தமிழ் மொழி மீதான பற்று என்ற பெயரில் அந்த ஜாதிய கட்டமைப்பை பக்தி இலக்கியம் மூலமாக நீர் ஊற்றி வளர்த்த கதையை பேசுகிறது. அதற்கு எதிராக உண்மையிலேயே அறம் காத்த அயோத்திதாசரின் செயல்பாடுகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. 
பூர்வ பௌத்தம், தமிழ் பௌத்தம் அதற்கும் அப்பால் மானிடம் குறித்து சிந்தித்த அயோத்திதாசரைப் பற்றிய பெரும் கதையாடல் இந்த நூல். 
பெரியாரும் கூட அயோத்திதாசரை மறந்தார் என்பதில் உள்ளது மற்றுமொரு வலி. 
இப்படி வலிகளை தொடர் பட்டியல் இடலாம். 
20 ஆண்டு கால உணர்வின் வெளிப்பாடு இந்த நூல் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். 
" போலி பிராமணன் " என்ற எழுத்தாளர் உபயோகித்த சொல். நான் தேடி அலைந்த எந்த அடைப்புக்குள்ளும் சிக்காத ஒன்று. 
இந்த நூல் (அயோத்திதாசர்) வந்த அதே சமயத்தில், ஜாதி கட்டமைப்பை தோளில் தாங்கிப் பிடித்து, போலி பிராமணிய வழி நடத்தலோடு இனி இடை நிலை ஜாதி தான் உங்களை எல்லா வகையிலும் ஆட்டுவிக்கும் என்ற கருத்தியலோடு ஒரு நூலும் வெளி வந்துள்ளது அதை இந்த கூட்டம் தலையில் வைத்து கொண்டாடுகிறது, ஆக இந்த சமூகம் இன்னமும் மாறவில்லை என்பதை அதே தீரா வலியுடன் காண வேண்டியுள்ளது இந்த மண்ணின் மீதான சாபம்.
அயோத்திதாசரை வாசித்து அறிவது நம் அனைவரின் தேவை. 
அயோத்திதாசர்
ஆசிரியர் :- டி.தருமராஜ்
கிழக்கு பதிப்பகம்
விலை 300

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக