The
simulacrum is never that which conceals truth – it is the truth which conceals
that there is none. The simulacrum is true – Ecclesiastes – From Simulations
by Jean
Baudrillard
இப்படி எழுதுவது தமிழில் கூச்சமில்லாது பலரால்
செய்யப்படுகிறது என்றாலும், எனக்கு மனம் ஒப்பவில்லை. இருந்தாலும் சமகாலத்தில் எழுந்திருக்கும்
குரல்களை தொகுத்து வாசிக்கிற அனுபவத்திற்காக இதைச் செய்கிறேன்.
‘போலச்செய்தலும் திரும்பச்செய்தலும்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக நான் எழுத
ஆரம்பித்த பின்பு, தமிழில் ‘சாதி’ தொடர்பான உரையாடலொன்று தன்னியல்பாய் (?) உருவானது போல
உருவாகியிருக்கிறது.
இந்த விவாதம் என்ன மாதிரியான முடிவுகளை நோக்கி நகரும்
என்பதை இப்பொழுதே கணிக்க முடியாது என்றாலும், இப்படியொரு பேச்சு எழுந்திருப்பதே
ஆரோக்கியமானது தான்.
அந்த வகையில், எனது கட்டுரைகளைத் தொடர்ந்து எழுந்த இந்தப்
பேச்சுகளை கவனிக்கத் தவறியவர்களுக்காக அவற்றிற்கான சுட்டிகளைக் கீழே தருகிறேன்.
1.
வெ. ராமசாமியின் ‘ஒத்திசைவு’ என்ற பெயரிலான வலைத்தளம் – இதில் தான் அவர் முதன்முதலாக எனது கட்டுரைத்
தொடரைக் குறிப்பிட்டு எழுதி பலரின் கவனத்தையும் இங்கு ஈர்த்தார். அதற்கான சுட்டி, http://othisaivu.wordpress.com/2014/11/12/post-417/
2.
கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி, ‘போலச்செய்தலும் திரும்பச்செய்தலும்’ என்ற தொடரை கவனமாக வாசித்து வந்ததோடு, அதன்
மூன்றாவது பகுதியான ‘என் தம்பி பாப்பான்’ என்பதை அவரது நண்பர்கள் பலரும் வாசிக்கும்
படி பரிந்துரைத்தார். இதனால் பலரும் இந்தத்
தொடருக்கு வந்து சேர்ந்தனர். இந்த நிலையிலேயே,
‘போலச்செய்தல் திரும்பச்செய்தல்’ குறித்த அவரது வினையாக, ‘The angst
of the Tamil Brahmin’ என்ற
பதிவொன்றை Times of India இதழில்
எழுதினார். அதற்கான சுட்டி இதோ http://timesofindia.indiatimes.com/city/chennai/The-angst-of-the-Tamil-brahmin-Live-and-let-live/articleshow/45408151.cms
3.
பத்ரியின் பதிவிற்கான எதிர்வினை போல நான் எழுதிய பத்தி ‘திராவிட காலத்தில்
பிராமணர்களுக்கு சாப விமோசனம் உண்டா?’ http://tdharumaraj.blogspot.in/2014/12/blog-post_9.html
4.
பத்ரியின் பதிவு எதிர்பார்த்ததை விடவும் வேகமாகப் பற்றிக் கொள்ள, ஜெயமோகன்
அதற்கு ஆதரவு போலத் தொனிக்கும் வகையில் ‘வாக்குமூல’ பாணியில் ஒரு பதிவை எழுதினார். அதை இங்கே வாசியுங்கள் http://www.jeyamohan.in/67150
5.
ஜெயமோகன் வழக்கம் போல் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் வேறு சிலரையும்
காட்டிக்கொடுத்திருந்தார். முற்போக்கு
பிராமணர்கள் (பீப் பிராமணர்கள்), வடுகர்கள் என்று அந்தப் பட்டியல் தொடர்கிறது. ‘இதற்குப் பதில் சொல்லவா?’ என்று முகநூலில் தேர்தல் நடத்தி ராஜன் குறை
கிருஷ்ணன் எழுதிய பதிவுக்கான சுட்டிகள் இவை https://www.facebook.com/notes/rajan-kurai-krishnan/பத்ரியார்-புலம்பலும்-ஜெயமோக-வியாக்கியானமும்/914324548580043?p
இந்த வரிசையில் இன்னும் நிறைய பேர் கலந்து
கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்களும் பேச ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் என்
விருப்பம். யார் யாரெல்லாம்
முன்வருகிறார்கள் என்று பார்க்கலாம்.
ஒவ்வொருவராய் வர வர அவற்றிற்கான சுட்டிகளை இங்கே தருவேன்.
போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் என்றாலே
இது தானே அர்த்தம்!
Comments
நன்றி
றெமிஜீயஸ் பெர்னாண்டோ
http://poornam11.blogspot.in/2014/12/blog-post.html