Skip to main content

Posts

Featured post

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

Recent posts

குதிரைவால் - இசைவும் சிதைவும்!

(இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு படம் பார்த்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.  பார்த்தவர், பார்க்காதவர் என்ற பேதமின்றி இருபாலருக்கும் இக்கட்டுரை விளங்காது!) 1 ஒரு மனிதனின் உடல் உருமாறுகிறது.  அதற்கானக் காரணங்களைத் தேடுவதே கதை.  இந்தக் தேடலில் கனவுகளுக்குக் குறி சொல்லும் பாட்டி வருகிறார்;  உளவியல் பேசும் கணிதப் பேராசிரியர் வருகிறார்; வாழ்க வளமுடன் உபாசகர் ஒருவரும் வருகிறார்.  இதனிடையே, இறந்து போன பக்கத்து வீட்டுக்காரரைப் பார்க்கிறான்; பணிபுரியும் வங்கியில் தகராறு செய்கிறான். அவனுக்கு முளைத்த குதிரைவால் ஒரு குறியீடு என்று படத்திலேயே சொல்லப்படுகிறது.  பால்யக் காதலைக் குறிப்பதாகவும் கூட.  ஒரு கட்டத்தில் அக்காதல் அவனைத்தேடி அறைக்கே வந்து விடுகிறது.  அதன் பின், மலைக்கிராம பால்யத்தை விவரிக்கிறார்கள். இறந்து போன சிறுதோழி நினைவுக்கு வருகிறாள்.  அவளுடைய மரணம் தொடர்பாக அவனுக்கிருந்த குற்றவுணர்வு நினைவுக்கு வருகிறது.  உடலுரு மாற்றத்தில் ஆரம்பித்த கதைக்கு ‘கடைசியில்..’ என்று சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை. சொல்ல விரும்பினால், ‘கடைசியில் படம் முடிந்து விடுகிறது’ என்று தான் சொல்ல வேண்டும்.  ‘மனம் சிதை

உள்ளூர் வரலாறுகள்: புனைவும் அறிவியலும் மயங்கும் வேளை

(2009ல் எழுதப்பட்ட இக்கட்டுரை, இன்றைக்கு ஒரு அரசியல் பிரகடனம்.) உள்ளூர் வரலாறு என்பதை வட்டார வரலாறு, வாய்மொழி வரலாறு, நாட்டுப்புற வரலாறு என்று பல்வேறு பெயர்களில் நாம் ஏற்கனவே பேசிக் கொண்டிருக்கிறோம். வட்டாரம், உள்ளூர், வாய்மொழி, நாட்டுப்புறம் என்று பெயர்கள் தான் மாறுகின்றனவேயொழிய இவைகளுக்குள் பெரிய வேறுபாடுகள் எதையும் நான் கற்பித்துக் கொள்ளவில்லை. இக்கட்டுரையில் முதலாவதாக, 'உள்ளூர் வரலாறு ’ என்ற சிந்தனை மேலோங்காமல் போனதற்கான அடிப்படைச் சிக்கல்கள் எவை என்ற கேள்வி விவாதிக்கப்படுகிறது. இரண்டாவதாக உள்ளூர் வரலாற்றை எதிலிருந்து கட்டமைப்பது என்பதைச் சில உதாரணங்கள் மூலம் விளக்க முயற்சிக்கிறேன்.  இறுதியாக அவ்வாறு கட்டமைக்கப்பெற்ற வரலாற்றை எழுதும் முறையியல், அதாவது அதன் வெளிப்பாட்டு வடிவம் என்னவாக இருக்கவேண்டும் என்பதை வரையறுக்க முயற்சிக்கிறேன். இம்மூன்று தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது தான் எனது தற்போதைய நோக்கமாக இருக்கிறது.  1 வரலாறு எழுதப்படும்போது அதில் 'உள்ளூர்' மற்றும் வட்டாரம் போன்ற கருத்தாக்கங்கள் அவசியம். சமூக அறிவியல் அல்லது மானுட அறிவியல்களுள் வரலாறு சந்தித்த பிர

ஜெய்பீமில் இல்லாதிருந்த குரலுரிமை!

 'ஜெய்பீம்' திரைப்படம் குறித்த எனது முதல் பதிவு இப்படி இருந்தது: #ஜெய்பீம் நலிந்தவர்களை ஈடேற்றும் போதை! 1. தமிழர்கள் தங்களைப் புரட்சியாளர்களாக எண்ணி மயங்குகிற தருணங்கள் நிறைய உண்டு. எம்ஜியார் அரசியலில் இருந்த பொழுது, திமுக தேர்தலில் வெற்றி பெற்று விடுகிற சமயங்களில், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு வரும் பொழுது… இந்த வரிசையில், ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை சிலாகிப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மனிதவுரிமை மீறல் எதிர்ப்புப் போராட்டங்களின் உக்கிரமும், உண்மைத்தன்மையும், நியாயமும் அவை நிகழ்த்தப்படும் போது மட்டுமே வெளிப்படுகின்றன. பின்னாட்களில், அவற்றை ஆவணமாகவோ அல்லது புனைவாகவோ உருட்டித் திரட்டும் பொழுது, மனிதர்களற்ற மனிதவுரிமைச் சிக்கல்களாகவே அவை வேடிக்கை காட்டுகின்றன. ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்க்கும் பொழுதும் எனக்கு இப்படித்தான் தோன்றியது - இருளர்களின் சமூகச் சிக்கல் இருக்கிறது, இருளர்கள் எங்கே சார்? 2. ‘இருளர்கள் எங்கே?’ என்ற கேள்வி கொஞ்சம் பழைய கேள்வி தான். இருளர்கள் பேசும் படைப்புகளை இருளர்களே தான் எடுக்க வேண்டும் என்றெல்லாம் நாம் அதற்குப் பதில் சொல்ல