Skip to main content

Posts

Showing posts with the label இலக்கியம்

வாழ்த்துகள் பத்மஶ்ரீ ஜெயமோகன்!

ஜெயமோகனுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்தி … . வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  வெகு சில சமயங்களில் மட்டுமே சரியான நபர்களுக்கு சரியான விருதுகள் வழங்கப்படுகின்றன.  இது இந்திய விருதுகளுக்கு மட்டுமல்ல, உலக விருதுகள் பலவற்றிற்கும் பொருந்தும். எனது கணிப்பின் படி, ஜெயமோகன், இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் எந்தவொரு விருதையும் பெற்றுக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர்.  மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்.  நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான அத்தியாயத்தை அடையாளப்படுத்துகிறவர்.  அவருடைய எழுத்து முறையும், உழைப்பும் ஏராளமான இளைய எழுத்தாளர்களுக்கு முன் மாதிரியாய் திகழ்கின்றன என்பதை நான் பார்க்கிறேன்.  சாகித்ய அகாடமி விருது அவருக்கு ஏன் இது வரையில் அறிவிக்கப்படவில்லை என்பது கூட எனது கேள்விகளில் ஒன்று.  எனவே பத்மஶ்ரீ வழங்கப்படுவது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. ஆனாலும் … இந்த விருதை தன் மேலே போர்த்திக் கொள்வதில் ஜெயமோகனுக்கு ஒரு சங்கடம் இருப்பதாக அவர் கற்பனை செய்கிறார்.  இந்தக் கற்பன...

விடலையும் குடும்பனும் - பூமணியின் அஞ்ஞாடி

முதற் பீடிகை அஞ்ஞாடியைப் பற்றி ஏதொன்றும் பேசத்தொடங்குவதற்கு முன், அந்தப் பெரிய நாவலைப் 'பனுவலாக' மாற்றுவது குறித்து கொஞ்சம் சொல்லி விடலாம்.    அது நாவலாக, பூமணியின் படைப்பாக்கமாக இருந்து கொண்டிருக்கிற வரையில், அதைக் குறித்து பேசுவதில் சின்னதோ பெரியதோ ஒரு அசௌகரியம் இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்தின் சிடுக்குகளையும் உள்ளடங்கிய முரண்களையும் அடையாளப்படுத்துகையில் அதன் படைப்பாளியையே படுத்துவதாக விளங்கிக்கொண்டு விடுகிற சங்கடம் இது.    அதே எழுத்தை சிலாகிக்கையிலோ சூழல் இன்னும் அபத்தமாக மாறி கூச்சத்தின் நுனியைத் தொட்டு விடுகிறது.  நாவலை 'ஆக்கமாகக்' கருதி உரையாடுவதிலுள்ள இந்தத் தடுமாற்றங்களிலிருந்து தப்பித்து விடுவதற்கு, 'ரோலாண் பார்த்'ன் 'ஆக்கங்களும் பனுவல்களும் வேறு வேறானவை' என்ற யோசனையை பயன்படுத்திக்கொள்கிறேன். ஒரு படைப்பை, ஆக்கமாக அணுகுவதிலிருந்து விலகி, பனுவலாக எதிர்கொள்வதில் குறிப்பிடத்தகுந்த அனுகூலங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது படைப்பிற்கும் வாசகனுக்குமான உறவு.  ஆக்கம், வாசகனை 'நுகர்வோன்' என்கிறது.  இன்னும்...