Skip to main content

Posts

Showing posts from October, 2015

சாதி சரி, தீண்டாமை தான் தப்பு - காந்தி ஜெயந்தி ஸ்பெசல்!

(‘விடலையும் குடும்பனும் - பூமணியின் அஞ்ஞாடி’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி.   காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘காந்தி காதலர்களுக்கு’ வழங்கப்படும் பூச்செண்டு!   இக்கட்டுரையை முழுமையாகப் படிக்க, புதுவிசை இதழ் 44, செப்டம்பர் 2015 இதழைத் தான் வாங்க வேண்டும்.) ஆண்டி, மாரி என்ற இரு பாத்திரங்களின் குணங்கள் இப்படியான 'பாதுகாவலன் - பலவீனன்' என்ற வகைமாதிரியாகவே அந்நாவல் முழுவதும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.     'பாதுகாவலன் - பலவீனன்' என்ற உறவு நிலையும்கூட வெளித்தெரியும்படியான நுண்ணதிகார ஒழுங்குகளை உடையது.   அது நிச்சயமாய் சமத்துவத்தை ஆதரிக்கவில்லை; ஏற்றத்தாழ்வுகளாலும் வேறுபாடுகளாலுமே பின்னப்பட்டிருக்கிறது.   ஆனால், 'உயர்சாதி - குடிவேலை செய்யும் சாதி' என்ற உறவு நிலையோடு ஒப்பிடுகையில் 'பாதுகாவலன் - பலவீனன்' என்ற உறவு நிலை ஆசுவாசப்படுத்துவதாகவே உள்ளது.   அதில் பொதிந்துள்ள அதிகாரச் செயல்பாடுகள் புத்திக்கு எட்டாத வகைக்கு, குடிவேலை சாதிகள் மீதான உயர்சாதி அடக்குமுறை கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது.    சமத்துவம் இல்லை என்றாலு