Skip to main content

Posts

Showing posts from January, 2017

ஜல்லிக்கட்டும் இந்தியக் காலனியமும்

(ஜல்லிக்கட்டு பற்றி முக நூலில் எழுதிய ஒரு சிறு குறிப்பிற்குப் பின் நடைபெற்ற உரையாடல் இது.  ஒரு ஆவணப்படுத்தலுக்காக இங்கே பதிந்து வைத்துக் கொள்கிறேன்.  என்னோடு உரையாடிய ஆ. செல்லபெருமாள், மானிடவியல் அறிஞர்; பகத் வீர அருண், மானிடவியல் முனைவர் பட்ட ஆய்வாளர்; பிலவேந்திரன், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்; புஷ்ப நந்தினி, நாடகத்துறை ஆய்வாளர்; ஏர் மகாராசன், ஆசிரியர்.) மாடும் மாதொருபாகனும் ! பெருமாள்முருகனின் மாதொருபாகனுக்கு என்ன நடந்ததோ அது தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டிற்கும் நடக்கிறது . பல்லைக்கடித்துக் கொண்டு , இரண்டையும் ஆதரிப்பது தவிர எனக்கு வேறு வாய்ப்புகள் இருக்கவில்லை . ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் , மாதொருபாகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் . இது தான் முக நூல் பதிவு.  இனி வருவது அது சார்ந்த உரையாடல்: ஆ . செல்லபெருமாள்:  மாதொருபாகனில் வெளிப்பட்டது சுயநல நுண் அரசியல் . ஜல்லிக்கட்டில் வெளிப்படுவது பண்பாட்டு அரசியல் . பிலவேந்திரன்:   நுண் அரசியல் , ‘ சுயநல