(ஜல்லிக்கட்டு பற்றி முக நூலில் எழுதிய ஒரு சிறு குறிப்பிற்குப் பின் நடைபெற்ற உரையாடல் இது. ஒரு ஆவணப்படுத்தலுக்காக இங்கே பதிந்து வைத்துக் கொள்கிறேன். என்னோடு உரையாடிய ஆ. செல்லபெருமாள், மானிடவியல் அறிஞர்; பகத் வீர அருண், மானிடவியல் முனைவர் பட்ட ஆய்வாளர்; பிலவேந்திரன், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்; புஷ்ப நந்தினி, நாடகத்துறை ஆய்வாளர்; ஏர் மகாராசன், ஆசிரியர்.) மாடும் மாதொருபாகனும் ! பெருமாள்முருகனின் மாதொருபாகனுக்கு என்ன நடந்ததோ அது தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டிற்கும் நடக்கிறது . பல்லைக்கடித்துக் கொண்டு , இரண்டையும் ஆதரிப்பது தவிர எனக்கு வேறு வாய்ப்புகள் இருக்கவில்லை . ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் , மாதொருபாகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் . இது தான் முக நூல் பதிவு. இனி வருவது அது சார்ந்த உரையாடல்: ஆ . செல்லபெருமாள்: மாதொருபாகனில் வெளிப்பட்டது சுயநல நுண் அரசியல் . ஜல்லிக்கட்டில் வெளிப்படுவது பண்பாட்டு அரசியல் . பிலவேந்திரன்: நுண் அரசியல் , ‘ சுயநல