Skip to main content

Posts

Showing posts from November, 2014

போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் – 5 அம்பேத்கரின் அதிகம் பேசப்படாத கட்டுரை

இந்தியச் சமூக ஒழுங்கமைப்பின் மிக முக்கிய சமூகக் கூறான சாதி’யை விளங்கிக் கொள்ளும் முயற்சியில் 1966ம் வருடம் ஃப்ரெஞ்ச் சமூகவியலாளர் லூயி டூமோ முன்வைத்த ‘போலச்செய்தல் ’ ’ என்ற கருத்தாக்கம் மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியிருந்த வேளையில், இதே போன்றதொரு கருத்தாக்கத்தை ‘சமஸ்கிருதவயமாதல்’ ’ என்ற பெயரில் இந்திய சமூகவியலாளர் எம். என். ஸ்ரீனிவாஸ் 1952லியே முன்வைத்திருந்தார் என்று முந்தைய பகுதிகளில் பார்த்திருந்தோம். பார்ப்பனர்களை முன்மாதிரியாகக் கொண்டு பிற சாதியினரும், குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களும், சாதிய ஒழுங்கமைப்பின் அடிப்படைகளையும் பழக்கவழக்கங்களையும் ‘போலச்செய்கிறார்கள்’ ’ என்றோ அல்லது ‘சமஸ்கிருதவயப்படுகிறார்கள்’ ’ என்றோ முன்வைக்கப்பட்ட வாதம், அப்படியொன்றும் புதிய விவாதமில்லை; இவ்வகை உரையாடலை, இந்த நாட்டின் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களிலேயே நிகழ்த்தியிருந்தார்கள்; அவ்வாறு நிகழ்த்தப்பட்ட விவாதம் இது வரையிலான சமூகவியல், மானிடவியல் விவாதங்களையெல்லாம் விட செழுமையானதாகவும், கூர்மையானதாகவும் இருந்தது; ஆனால், வழக்கமாய் தாழ்த்தப்பட்ட மக்களின் அற

பாண்டியன், எஸ்பொ, செல்வா கனகநாயகம் போன்றவர்கள் குறைந்தபட்சம் ஒரு திரைப்படத்திற்காவது திரைக்கதை / வசனம் எழுதாதது யாருடைய தவறு?

பாண்டியன், எஸ்பொ, செல்வா கனகநாயகம் போன்றவர்கள் குறைந்தபட்சம் ஒரு திரைப்படத்திற்காவது திரைக்கதை / வசனம் எழுதாதது யாருடைய தவறு?   பொதுப்புத்தியிலிருந்து சம அளவு விலகியிருந்த அல்லது விலக்கப்பட்டிருந்தவர்கள் MSS பாண்டியனும் ருத்ரையாவும் (இந்தப் பதிவை இப்படி வேறொரு மூலையிலிருந்து ஆரம்பிக்க என்னை அனுமதியுங்கள்).     பாண்டியனின் எழுத்துகள் எப்படி கல்வி நிலைய வளாகங்களைக் கடக்கவில்லையோ அதே போல் ருத்ரையாவின் படங்கள் மாற்று சினிமா வெளியைக் கடக்கவில்லை.   இதில் ஏதும் தவறு இருப்பதாக நினைக்கவில்லை;   குறை சொல்வதற்கும் எதுவுமில்லை.   ஏனென்றால், இரண்டுமே, வாசகராய் இருப்பதற்கும் பார்வையாளராய் இருப்பதற்கும் சற்று அதிகப்படியான பொறுமையை வேண்டுபவை. ஆனால், இவ்விருவரின் மறைவையும் தமிழகத்து பெரும் பத்திரிகைகள் எவ்வாறு கையாண்டன எனபது நிச்சயமாய் ஆரோக்கியமானதல்ல என்பது மட்டும் நமக்குத் தெரியும்.   ருத்ரையாவிற்கு வருகிற இரங்கல் கட்டுரைகளில் கால்வாசி கூட பாண்டியனுக்கு வரவில்லை.   அதுவும் கூட செல்வா கனகநாயகத்திற்கும் எஸ்பொவிற்கும் வரப்போவதில்லை. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

யாரோ

(கவனம்: இது மேற்கோள் காட்டுவதற்கான பிரதி அல்ல; இதைக் கப்ஸா என்று அறிகிறவர்கள் பாக்கியவான்கள்!) 1710 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 18ம் நாள், தரங்கம்பாடியின் சீயோன் தேவாலயத்திற்கு அடுத்திருந்த மாளிகையின் உப்பரிகையிலிருந்து, கிழக்கிலேயே சென்று கொண்டிருந்தால் மேற்கு வந்துவிடும் என்று தீவிரமாக நம்பிய லூத்தரன் மிஷனரி ஹான்ரீச் ப்ளூச்சாவ், புயலுக்கான அறிகுறிகள் வலுத்திருந்த வங்கக் கடலையேக் கூர்ந்து பார்த்து தனது பதிவேட்டில் இப்படி எழுதினார்: ‘இன்று காலையில், சிப்பிகளைப் பொறுக்க வரும் சிறுவர்களுக்காக வாதாமரக் கொட்டைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தேன்.   கேட்டிகிஸ்ட் பர்னபாஸ் கவலையோடு என்னைப் பார்க்க நின்றிருந்தான்.   இன்னமும் இயேசுவுக்குள் திரும்பியிராத அவன் மனைவி சில நாட்களாய் நெருநெருக்கும் மணல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாள்.   அவள் நிலைமையில் ஏதாவது அசம்பாவிதமோ என்றே நான் அவனிடம் கேட்டேன். ஆனால், அவன் மலைநாட்டிற்குச் சென்று மாந்தரீகனை அழைத்து வர விரும்புவதாகவும், தன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக இந்த ஒரு முறை மட்டும் இதை அனுமதிக்கும்படியும் என்னைக் கேட்டான். அவளுக்கு வந்திருப்பது