இந்தியச் சமூக ஒழுங்கமைப்பின் மிக முக்கிய சமூகக் கூறான சாதி’யை விளங்கிக் கொள்ளும் முயற்சியில் 1966ம் வருடம் ஃப்ரெஞ்ச் சமூகவியலாளர் லூயி டூமோ முன்வைத்த ‘போலச்செய்தல் ’ ’ என்ற கருத்தாக்கம் மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியிருந்த வேளையில், இதே போன்றதொரு கருத்தாக்கத்தை ‘சமஸ்கிருதவயமாதல்’ ’ என்ற பெயரில் இந்திய சமூகவியலாளர் எம். என். ஸ்ரீனிவாஸ் 1952லியே முன்வைத்திருந்தார் என்று முந்தைய பகுதிகளில் பார்த்திருந்தோம். பார்ப்பனர்களை முன்மாதிரியாகக் கொண்டு பிற சாதியினரும், குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களும், சாதிய ஒழுங்கமைப்பின் அடிப்படைகளையும் பழக்கவழக்கங்களையும் ‘போலச்செய்கிறார்கள்’ ’ என்றோ அல்லது ‘சமஸ்கிருதவயப்படுகிறார்கள்’ ’ என்றோ முன்வைக்கப்பட்ட வாதம், அப்படியொன்றும் புதிய விவாதமில்லை; இவ்வகை உரையாடலை, இந்த நாட்டின் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களிலேயே நிகழ்த்தியிருந்தார்கள்; அவ்வாறு நிகழ்த்தப்பட்ட விவாதம் இது வரையிலான சமூகவியல், மானிடவியல் விவாதங்களையெல்லாம் விட செழுமையானதாகவும், கூர்மையானதாகவும் இருந்தது; ஆனால், வழக்கமாய் தாழ்த்தப்பட்ட மக்களின் அற