Skip to main content

Posts

Showing posts from August, 2016

சீனு ராமசாமி: தலைகீழ் பாரதிராஜா

சமீபத்திய திரைப்பட ஆச்சரியங்களில் ஒன்று, சீனு ராமசாமியின் தர்மதுரை. நான் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிற ‘கிராமத்திலிருந்து தப்பித்தல்' தான் படத்தின் கதை!   அதாவது, பாரதிராஜா பாணி ‘கிராமப் புல்லரிப்புகளுக்கு' முற்றிலும் எதிரான கதை.  கதை இவ்வளவு தான்.  பட்டறிவும் பகுத்தறிவும் பெற்று, கிராமத்திற்கு திரும்பி வருகிறான் ஒருவன்.   அவனை, ஊரும் உறவும் பிய்த்து எறிகின்றன .  உயிர் பிழைத்தால் போதும் என்று அவன் தப்பித்து ஓடுகிறான்.  இதை, சீனு ராமசாமி திகிலும் கருணையும் கலந்து சொல்லியிருக்கிறார்.  கிராமத்தில் திகில்; நகரத்தில் கருணை! இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால், 16 வயதினிலே படத்தில் ‘மயிலு, மயிலு’ என்று நாடகத்தனமாக சொல்லித் திரியும் ஒரு மருத்துவரை ஞாபகம் இருக்கிறதா? அந்தப் படத்தில் ஒரு அசட்டு வில்லனாக அவர் வந்து போயிருப்பார்.   நாகரீக நகரம், கிராமத்து வெகுளித்தனத்தை எவ்வாறு வஞ்சிக்கிறது என்று விளக்க அவரைக் காட்டியிருப்பார்கள். ஏறக்குறைய 40 வருடங்கள் கழித்து, மொத்தமும் தலைகீழாக மாறியிருக்கிறது.   இப்பொழுது நகரம் வெகுளி; கிராமம் வஞ்சனை!   இந்த த

கபாலி பெயரில் பைத்தியக்கார ஸ்கூல்!

நேற்று மதுரை, அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் நடைபெற்ற 'கபாலி கொந்தளிப்பு விழா' விற்கு போயிருந்தேன். தலித் பெயரில் நடக்கும் இப்படியொரு எண்டர்டெய்னரை இத்தனை நாள் இழந்திருந்தேனே என்று பெரும் கழிவிரக்கம் என்னைச் சூழந்து கொண்டது. பத்திரிகையாளர் சேது மலேசிய தமிழ் இனப்பிரச்சினை பற்றி ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தார். மலேசிய தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கான அறைகூவலே கபாலி திரைப்படம் என்று அவர் முழங்கி அமர்ந்த போது நிய ாயமாய் அவருக்குத் தந்திருக்க வேண்டிய ஒரு பாட்டில் தண்ணீரை யாருமே வழங்கியிருக்கவில்லை. அடுத்து பேசிய பேராசிரியர் பிரபாகர், ரொம்பவும் வெகுளியாய், ஏதோ இது சீரியஸான விவாதக்கூட்டம் என்று எண்ணி பேசிச் சென்றது ரொம்பவும் காமடியாய் இருந்தது. அடுத்து பேசிய அஜயன் பாலாவும், இராமலிங்கமும் ஒட்டு மொத்த கூட்டத்தையும் தூக்கி நிறுத்தினார்கள். அஜயன் பாலா தனது பேச்சில், ரஜினி ரசிகனாக இருப்பது எப்படி ஒரு இண்டலெக்சுவல் நிலைப்பாடு என்பதை ஆணித்தரமாக நிறுவினார். அதிலும் முதல் ஷோ பார்ப்பதற்காக தான் மேற்கொண்ட அரசியல் தந்திரங்களை அவர் விவரித்த பாங்கு, ஒட