Skip to main content

Posts

Showing posts from November, 2016

சினிமா சிந்திக்கிறது - தொடரும் கபாலி உரையாடல்

(கபாலி திரைப்படம் பற்றி எழுதியிருந்த மூன்று கட்டுரைகள் தொடர்பாக எழுத்தாளர் மருதனோடு நடைபெற்ற முகநூல் உரையாடல்) மருதன்: டி. தருமராஜின்   கபாலி கட்டுரையை இன்றுதான் வாசித்தேன் . உண்மையில் கபாலியை ஒரு சாக்காக வைத்து கனமான ஒரு நீண்ட உரையாடலை அவர் நிகழ்த்தியிருக்கிறார் . திரைப்படத்தின் கதை , திரைப்படத்துக்கு வெளியில் பின்னப்படும் கதை என்று இரண்டாகப் பிரித்து அவர் கபாலியை ஆராய்வதைப் போல் கபாலி பற்றிய தருமராஜின் பார்வை , கபாலிக்கு வெளியில் நீளும் அவருடைய பார்வை என்று இரண்டாக இந்தக் கட்டுரையைப் பிரித்து ஆராய்ந்து , ரசிக்கலாம் . மூன்று பாகங்களில் நீளும் கட்டுரைகளின் தலைப்புகளை அவர் பின்வருமாறும் வைத்திருக்கலாம் . நான் ஏன் ரஜினி அல்ல ? நான் ஏன் ரஞ்சித் அல்ல ? நான் ஏன் நானே அல்ல ?  டி. தருமராஜ்: எனக்குப் போலவே இல்லாததெல்லாம் உங்கள் கண்களுக்கும்   தென்பட ஆரம்பித்திருக்கிறது, மருதன் !  இது ஒரு ஸோம்பி விளைவு . அந்தக் கட்டுரைகள் சில முக்கியமான விஷயங்களைப் பேசுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் .