'நான் ஏன் தலித்தும் அல்ல?' நூல் குறித்து சுரேஷ் பிரதீப் எழுதியிருக்கும் அறிமுகம் அப்புத்தகத்தின் சாரத்தை சுருக்கமாக தருகிறது. தொடக்க நிலை வாசகர்கள் அந்த நூலை தயக்கமின்றி அணுகுவதற்கு இக்கட்டுரை உதவும். அந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள், குறிப்பாக, தலித் அடையாள மறுப்பும், தவிர்க்கவியலாத திணிப்பும்; தலித் அரசியலாளர் - தலித் காதலர்; விடலை - குடும்பன்; தலைகீழாக்கம் குறித்த விவாதங்கள்; போலச்செய்தலும் கலை வடிவங்களும் நகைச்சுவையும்; திரும்பச்செய்தலும் வன்முறையும்; திருவிழாவும் கலவரமும் போன்றவை இன்னமும் உரையாடலாக மாறியிருக்கவில்லை. தமிழ்ச் சூழலில் அப்படியெல்லாம் உடனடியாக எதிர்பார்ப்பது அதிகம் தான். ஆனால், புத்தகம் வெளிவருவதற்கு முன்னால் தவிர்க்கவியலாத சூழலில் இந்நூலுக்கான விமர்சனத்தை நானே கூட எழுதுவேன் என்று கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றும் காலகட்டம் இன்னமும் கனியவில்லை என்று தான் நினைக்கிறேன். இன்னும் கூட நான் காத்திருக்கிறேன். டி. தருமராஜ் இனி சுரேஷ் பிரதீப் கட்டுரை: டி. தருமராஜின் "நான் ஏன் தலித்தும் அல்ல?