‘ உயிர்மை ’ யில் வெளிவந்திருக்கும் ராஜன் குறையின் கட்டுரை நமக்கு இரண்டு சாத்தியங்களே உள்ளதாகச் சொல்கிறது . ஒன்று , வெகுஜன இறையாண்மை ; இன்னொன்று , பாசிசம் . இவ்விரண்டில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுப்பதே அரசியல் யதார்த்தம் என்று நம் கழுத்தில் கத்தியையும் வைக்கிறது . உதறுது தானே ? அதைத் தான் அந்தக் கட்டுரையும் விரும்புகிறது . ‘ இந்தக் கட்டுரை யாருக்காக எழுதப்படுகிறது ?’ என்ற கேள்வியில் நாம் ஆரம்பிக்கலாம் . நிச்சயமாய் இது வெகுஜனங்களுக்கோ அல்லது பாசிச சிந்தனை கொண்டவர்களுக்கோ எழுதப்பட்டது அல்ல . கட்டுரை நெடுக , ‘ கற்பிதங்களில் மூழ்கியிருப்பவர்கள் ’, ‘ பித்தர்கள் ’, ‘ பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் ’ என்றெல்லாம் நக்கலடிக்கப்படும் சுதந்திரவாத சிந்தனையாளர்களை நோக்கித் தான் அது பேசிக் கொண்டிருக்கிறது . * வெகுஜன இறையாண்மையின் நியாயத்தை ராஜன் , எர்னஸ்டோ லாக்லவ்வின் ‘ காலிக்குறிப்பான் ’ என்ற கருத்தாக்கம் கொண்டு விளக்குகிறார் . அது மிகச் சரியானதும் கூட . மக்களாட்சி என்ற கற்பனையும் கூட இதையே தான் ஆதரிக