Skip to main content

பூமணியின் அஞ்ஞாடி குறிப்புகள் - 1






அஞ்ஞாடியின் பிரதானமான கதைசொல்லும் முறை 'பேச்சு' தான்.  பேச்சின் சகல வடிவங்களும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்வது போல், அந்த நாவல் பல்வேறு படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; அப்படலங்கள் பின்பு அத்தியாயங்களாக வகிரப்பட்டுள்ளன.  அத்தியாயங்களின் தலைப்புகள் பேச்சின் தெறிப்புகளாக விளங்குவது தான் அலாதியானது.  ஒரு அத்தியாயத்தின் தலைப்பு - 'போடி அனந்தி';
இன்னொன்று - 'அது போதும் அப்புச்சி';   அப்புறம் 'அடியே மாடத்தி...'   இப்படியே.....

நாவல் முழுக்க யாராவது யாரோடவாது பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.  எந்த முஸ்தீபுகளும் இல்லாமல் இப்படியான பேச்சுகள் நாவலுக்குள் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.  இரண்டிரண்டு பேராய், சில நேரங்களில் கூட்டமாய் கூடி நின்று நாவலில் நிகழும் சம்பவங்களைக் குறித்துத் தங்களுக்குள் விவாதித்துக் கொள்கிறார்கள்.  அது கிராமங்களில் காணப்படும் தேநீர் கடை, களத்து மேடு, மந்தை, பேருந்து நிலையம், வயக்காடு போன்ற இடங்களிலெல்லாம் ஒன்றிரண்டு பேராய் சேர்ந்து கொண்டால் எவ்வாறு பேசிக்கொள்வார்களோ அவ்வாறு பேசிக்கொள்கிறார்கள்.  அவரவர்க்கு தெரிந்த ஞானத்தினடிப்படையில் அந்த உரையாடல்கள் நடைபெறுகின்றன.  அதில் தத்துவ விளக்கங்கள் இருக்கவில்லை; அறிவியல் பூர்வமான அலசல் முறை வெளிப்படவில்லை; பகுத்தறிவிற்கு அங்கு வேலை ஏதும் இருக்கவில்லை.  ஆனால், அக்குரல்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன.


எடுத்துக்காட்டுக்கு ஒன்று:

[‘இன்னொரு நாள் ஆறு நாடார்கள் தெருவில் நின்று சகடாலடித்துக் கொண்டிருந்தார்கள்.

“அண்ணைக்குக் கலகத்துல மறவங்க வாங்கிக்கெட்னது லேசுக்குள்ள மறக்குமா.”

“காலத்துக்கும் மறக்க மாட்டான்.”

“அஞ்சாறு துப்பாக்கிய வச்சுக்கிட்டு எர நூறு முன்னூரு பேரச் சுட்டுத் தள்ளுனமா சும்மாவா?”

“கொதிக்கிற எண்ணெய ஊத்தி அவிஞ்சு போனது எத்தனையோ?”

“மொளகாப்பொடி தூவி குருடானது எத்தனையோ?”

“நானே ரெண்டு பேரு மண்டையில கல்லத் தூக்கிப் போட்டென்.  பெழச்சுக்கிருவான்னு நெனைக்கயா.  மூளக்குழி செதறிப்போயிருக்கும்.”

“அத்தன பேரவும் தூக்கிட்டுப் போயிட்டானே. அதான் சாமர்த்தியம்...”

“அது நல்லது தான். இங்க கிடந்து நாறவா.”

“செவங்கோவில் மட்டும் தொறக்கட்டும்.  அப்ப என்ன நடக்கப் போகுதுன்னு பாரு.”

“எதிரியெல்லாம் ஓடிப்புட்டான்.  நம்மள் எந்தப் பய தடுக்கப் போறான்.”

“பட்டாளத்தானும் போலீசுந்தான் காவலுக்கு நிப்பான்.”

“அவனவும் சுட்டுத் தள்ளீற வேண்டியது தான்.”

“ரெண்டு மூணு பேர போட்டுத் தள்ளுனா போதும்.  எல்லாம் ஓட்டம் புடிச்சிருவான்.”

“நம்ம சாதிக்காரங்க எடஞ்சலில்லாமச் சாமி கும்புடனும்.”]
(அஞ்ஞாடி – பக்கம் 804)
இந்த வெகுஜனப் பேச்சுகள் தான் அந்நாவலில் கதையை நகர்த்திச் செல்கிறது. 

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக