அயோத்திதாசரின் சாதி – மொழி –
சமயம் தொடர்பான கருத்துகளிலிருந்து நான் கீழ்கண்ட வாக்கியங்களைத் தருவித்துக்
கொள்கிறேன்:
நமக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமே உண்மையை நெருங்க முடியும்.
'இலட்சணம்', 'அந்தரார்த்தம்', 'விவேக விருத்தி', 'சாதித்தல்' போன்ற தமிழ் கருத்தாக்கங்களை உருவாக்கிய தன்மை.
மொழி குறித்து புதிய பார்வையை முன்மொழிந்தது (சொற்கள், வாக்கியங்கள்!).
'சாதி' என்று நாம் நம்பிக்கொண்டிருப்பது கட்டுக்கதை என்ற வாதம்.
பிராமணர்கள் திரிபு வாதங்களை ஏற்படுத்தினார்கள் என்ற தகவல்.
இந்திய வரலாறு, பிராமணர்களுக்கு முன், பின் என்று பார்க்கப்பட வேண்டியதன் அவசியம்.
பிராமணியம் இந்திய சமூகத்தை எவ்வாறு தனது திட்டத்திற்குள் கொண்டு வந்தது என்ற யோசனை.
பிராமணியமயமாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள் எவ்வாறு 'தீண்டத்தகாதவர்களாக' மாற்றப்பட்டார்கள் என்ற விவரம்.
பிராமணிய எதிர்ப்பு மட்டுமல்ல, பிராமணிய நீக்கமும் தேவை என்ற யோசனை.
பிராமணிய நீக்கம், வேறொரு தத்துவத் தடத்தை கட்டமைப்பதன் மூலமே சாத்தியம் என்ற முடிவு.
(முற்றும்)
Comments