Skip to main content

மெட்ராஸ் - திரைப்பட உரையாடல் - இன்று காலையில் மாணவர்கள் இன்னும் காட்டமான கேள்விகளுடன் வந்தார்கள்.



கேள்வி 1:  ஒடுக்கப்பட்டோர் பெருஞ்சமூகத்துடன் உரையாடலை வைத்துக் கொள்வது ஏன் அவசியம்?  அப்படியொரு உரையாடல் நடைபெறுவதால் என்ன நடந்து விடும்?  காலம் காலமாய் என்னை மிதித்துக் கொண்டிருப்பவனுடன் நான் எப்படி உரையாடலுக்குச் செல்வது?  அவன் காலை வெட்டுவது சரியா அல்லது அவனோடு உரையாடுவது சரியா?

கேள்வி 2:  உரையாடல் அல்லது பேச்சுவார்த்தைக்கு முன்வருவது என்பது தோல்வியின் பயத்தில் நடப்பது தானே!  ஒடுக்கப்பட்டவர்கள் பெருஞ்சமூகத்துடன் தோற்றுப் போனார்கள் என்று சொல்வதா? அதனால் தான் உரையாடலை பரிந்துரைக்கிறீர்களா?



கேள்வி 3:  இந்த உரையாடலை வெற்றிகரமாக செய்து முடித்ததைப் பார்த்தால் இயக்குனர் இரஞ்சித்தை இப்பெருஞ்சமூகம் தனக்குத் தோதாக தகவமைத்துக் கொண்டது என்று தானே அர்த்தம்?  இரஞ்சித் விலை போனார் என்று தானே சொல்ல வேண்டும்?

கேள்வி 4:  பெருஞ்சமூகத்தைச் சார்ந்த நான், அதாவது ஒடுக்குதலை அனுபவித்தறியாத நான், இந்த உரையாடலை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்? நீங்கள் சொல்வது போல் மெட்ராஸ் போன்ற முயற்சிகள் ஒரு உரையாடலின் நம்பிக்கையளிக்கும் பகுதிகள் என்றால், இதைக் கேட்ட பெருஞ்சமூகம் பதிலுக்கு என்ன மாதிரியான பேச்சை உருவாக்க வேண்டும்?

கேள்வி 5:  அது என்ன 'பெருஞ்சமூகம்', அவர்கள் என்ன 'பெரிய' இவர்களா...?

கேள்வி 6:  என்ன நடந்து விடும்?  சினிமா என்ற பெருங்கதையாடல் இரஞ்சித் போன்ற கலைஞர்களை தனக்குள் இழுத்துக் கொண்டு தனக்கு சார்பானவராக மாற்றி விடும்!  அது தரக்கூடிய நெருக்கடி தாங்காமல் இப்படியான கலைஞர்களும் தங்களை சமரசம் செய்து கொள்வார்கள்.  ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்களது ஒவ்வொரு பிரதி நிதிகளையும் இப்படியே தான் இழந்து நிற்கிறது.  உரையாடல் என்று சொல்வதே ஏமாற்று வேலை தானா?

கேள்வி 7:  அது அவ்வளவு எளிதாகவும் நடந்து விட முடியாது!  இந்தப் படத்தின் காரணமாக அதன் குழுவினருக்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களில் கிடைத்த வரவேற்பு 'மகிழ்ச்சி' யானது மட்டுமல்ல; 'நெருக்கடி'யானதும் கூட!  அடுத்த படத்தை யோசிக்கும் போது அக்குழுவினர் அந்த நெருக்கடியை நிச்சயம் உணர்வார்கள் என்றார்கள், இப்படத்திற்கான வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தங்களையறியாமல் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடம் பிரமாண வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வதா?

கேள்வி 8:  வழக்கத்திலிருந்து மாறாக மெட்ராஸ் திரைப்படத்தின் கொண்டாட்டத்தில் நடிகர்கள் பின்புறம் தள்ளப்பட்டு, கதாபாத்திரங்களும், தொழில் நுட்ப வல்லுனர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டது இதனால் தானா? 

கேள்வி 9:  முழு நெருக்கடியையும் அக்குழுவினர் மீது சுமத்துவதில் நியாயம் இருக்கிறதா?

கேள்வி 10: கலைஞர்களின் மீது இத்தனை விதமான நெருக்கடிகளை விதிப்பது சரியா?  அவர்களுக்கான சுதந்திரத்தை பறிப்பது போலல்லவா இருக்கிறது? சமூகத்திலிருந்து விலகி நிற்பவன் தானே கலைஞன்!  இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் கலைஞர்களின் படைப்புச் சுதந்திரம் பறிக்கப்படுகிறதா?

இந்தக் கேள்விகளையெல்லாம் என் கணிணியில் படிக்க நேர்ந்த நண்பர், 'சரி. நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?' என்று கேட்டார்.

'ஒரு நல்ல ஆசிரியனின் பண்பு, மாணவர்களின் எல்லா கேள்விகளுக்கும் தானே பதில் சொல்ல முயலாமல் இருப்பது' என்றேன் நான்.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக