Skip to main content

Posts

Showing posts from January, 2015

மாதொருபாகன் என்ற புனிதப்பிரதி

அன்புள்ள எம். ராஜா, மாதொருபாகன் நிகழ்வு குறித்த உங்களது எதிர்வினைகளுக்கு நன்றி.   நீங்கள் கவனப்படுத்தும் இரண்டு செய்திகளை நான் இப்படி புரிந்து கொள்கிறேன்.   1.     மாதொருபாகன், சாதியமைப்பு மீதான விமர்சனங்கள் கொண்ட படைப்பு. 2.     நிலவுடமைச் சமூக மதிப்பீடுகளில் தோய்ந்திருக்கும் குடியானவனின் பார்வையை மாதொருபாகன் துல்லியமாகப் பதிவு செய்கிறது. பெருமாள்முருகனின் முந்தைய பிரதிகளை வாசித்திருக்கிற ஒருவருக்கு, மாதொருபாகனை இவ்வாறு சாதியமைப்பு குறித்த கண்டனங்கள் நிறைந்த பிரதியாக வாசிப்பதற்கான ஆவல் ஏற்படுவது இயல்பு தான்.   ஆனால், வாசக விருப்பத்தையும் தாண்டி, குறிப்பிட்ட பிரதி அப்படியொரு வாசிப்பிற்கான வாய்ப்புகளை வழங்குகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.   மாதொருபாகன் அப்படியான வாய்ப்புகளை வழங்கவில்லை என்பதே எனது முடிவு. திருவிழாக்களில் உருவாகும் சொற்ப நேர சமூக நெகிழ்வு சாதியால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.   அங்கொரு கட்டற்றத் தன்மை உருவாகிறது.   அந்தக் கட்டற்ற சூழலில் இழப்பதற்கு எதுவுமற்றவனே பலசாலியாக இருக்கிறான்.

யாராவது இருக்குறீர்களா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையில், நாட்டுப்புறவியல் முதுகலைப் ( M. A. in Folklore ) பாடப்பிரிவிற்கான 2015-16ம் வருட மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறவியலில் முதுகலை என்ற பாடத்திட்டம் 1987ம் வருடம் பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியில் தொடங்கப்பட்ட போது தமிழ் நாட்டில் எல்லோருக்கும் ஆச்சரியம்.   இப்படியும் ஒரு படிப்பா? ஏராளமான கேள்விகள், கிண்டல்கள், பொறாமை, ஏச்சுகள் - எல்லாமே அதீத வகை தான்! ·          ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனம் நாட்டுப்புறவியலை முன்னிறுத்துவதில் 'பன்னாட்டு அரசியல்' இருப்பதாய் சொல்லிக்கொண்டிருக்கும் இந்துத்துவர்கள்... ·          அதையே இன்னொரு தொனியில் 'அய்யய்யோ கிறிஸ்தவ நிறுவனத்திற்குள் பேய்களும் பிசாசுகளுமா?' என்று கூக்குரல் எழுப்பும், கழுத்தில் சிலுவை அணிந்த கிறிஸ்தவ அடிப்படைவாதிகள்... ·          'இது எங்க ஏரியா உள்ள வராதே..' என்று மார்தட்டிய நாவாவினர்... ·          அதனாலேயே உள்ளே வர சங்கடப்பட்டு ரொம்ப வருடங்களுக்கு வாசலிலேயே நின்று கொண்டிருந்த கலை இரவ