Skip to main content

சாருவின் பொங்குமாங்கடல்





'சாரு, தன்ன முட்டாள்ங்கறாரே/"

'முட்டாள்னு அறிவிக்கிறார் அவ்வளவு தானே?!'

'என்ன இருந்தாலும், அவர் எழுப்புற தனி மனிதப் பிரச்சினை நியாயமால்லா இருக்கு?  இளையராஜா மாதிரி பிம்பங்களுக்காக தனிமனுஷ வாழ்வாதார உரிமையை பலி கொடுக்க முடியுமா?'

'இன்னும் எமோசனலா நீங்க பேசனும்.  சாருவப் பாருங்க 'நமக்கெல்லாம் தோல் தடித்து விட்டதா?'  எப்படி கேக்குறாரு?  அந்த மாதிரி கோவமா கேளுங்க.  'எளியவர்களுக்கு இந்த உலகில் வாழும் உரிமை இல்லையா?' 'இந்த தேசத்தில் கடவுள், புனிதர், மகான், அறிவுஜீவி மட்டும் தான் வாழ முடியுமா? இப்படி எமோசனோட கேளுங்க'.'

'அதே தான்.  இது அப்பட்டமான தனி மனித உரிமை மீறல்ங்கறேன்!  அந்த ஆள் இனி எந்த மொகத்தோடு இந்த சமூகத்தில் தொடர்ந்து இயங்குவார்?  அவர் வீட்டுக்கு பேப்பர் போடும் பையன் அவரைப் பார்த்து சிரிக்க மாட்டானா?  பஸ்ஸில அவருக்குப் பக்கத்தில யாரும் உக்கார வந்து, 'சீ, இவனா?' ன்னு விலகிப் போக மாட்டாங்களா?  அவரால இனி கௌரவமா வாழத் தான் முடியுமா?'

'இந்தத் தமிழ் சினிமாலெல்லாம் காட்டுவாங்களே, லஞ்சம் வாங்கிட்டு இல்ல வேறெந்த அசிங்கத்தையோ செஞ்சுட்டு, போலிஸ் வந்து இழுத்துப் போகிற அப்புராணி மிடில்கிளாஸை ஊரே எட்ட நின்னு சிரிக்குமே அது மாதிரியான சீனா?'

'ஏறக்குறைய அப்டித்தான்னு வச்சுக்கங்களேன், அவுரு பாவம் இல்லியா?'

'அப்டின்னா அவுரு பாவம் தான்!'

'பாத்தீங்களா, இது சரியான பேச்சி.'

'அவரென்ன கொலக்குத்தமா செஞ்சுட்டாரு?'

'அதான?'

'இந்தச் சின்ன தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?'

'அட, அவுரு செஞ்சது தப்பே இல்லங்க.  அது அவரோட தொழில்.'

'பாருங்க, அவரு செஞ்சது தப்பு கூட இல்ல.  அவரு, அவரு தொழிலத்தான் செஞ்சுருக்காரு.'

'ஏறக்கொறய சாகசம் பண்ணிருக்காரு'

''இளையராசாவையே கவுத்தவனாக்கும்!'

'பின்ன, யாருக்கு அந்தத் தைரியம் வரும்?  கம்பனிக்குள்ள மரியாதல்லா?'

'பெறவு, யாரு அவரப் பாத்து சிரிக்கிறது?'

'இல்ல, சாரு அப்டி எழுதியிருக்காருல்லா.'

'ஒரு வேள சாரு தான் அப்படி சிரிக்கிறாரோ என்னமோ?'

'சாருவா?'

'ம்.  பையன் ஏதோ தப்பு பண்ணிட்டான்.  அவன் தான் வெவரம் தெரியாதவன்,  நீங்க மகான், பெரியவரு, தன்மையா பேசி புத்திமதி சொல்லாண்டாமா?  இப்படியா நாலு பேரு மத்தியில வச்சி செய்றதுனு தான சாரு சொல்றாரு?'

'இல்லீங்க, சாரு அப்டில்லாம் சொல்லல.  அந்தப் பையன் தப்பே பண்ணல, இளையராசாவும் பெரிய மனுசன்லாம் இல்லன்னு தான சாரு ஃபீல் பண்றாரு?'

'பின்ன எதுக்கு அந்த மீடியாக்காரரோட வாழ்வுரிமை பாதிக்கப்பட்டதுங்கறாரு?'

'அந்த மீடியாக்காரரு, ஒரு எளிய மனுஷங்க,  அவருக்காக கொரல் குடுக்க வேண்டாமா?'

'மீடியாக்காரரா, எளிய மனுசனா?'

'ரெண்டும் தான்னு வச்சுக்கங்களேன்.'

'அன்னைக்கி, அந்த எடத்துல, அந்த கேள்விய கேட்டது சாதாரண மனுசன்லாம் இல்லங்க.  அது மீடியாக்காரர் கேட்ட கேள்வி.'
'அதெப்படி?'

அந்த ஃபீப் சாங் பத்தி இளையராஜா என்ன நினைப்பாருன்னு சாதாரண மனுசனுக்கு நல்லாவே தெரியும்.  மீடியாக்காரங்களுக்கு தான் தெரியாது?'
'இதென்ன புதுக்கரடி.  சாதாரண ஜனங்களுக்கு தெரிஞ்சது மீடியாக்கு தெரியாதா?'

'சாரு, எந்த விஷயத்துக்க்கு எப்டி ரியாக்ட் பண்ணுவாருன்னு கூட சாதாரண ஜனங்களுக்கு தெரியும்.  ஆனா மீடியாக்கு தெரியாது.'

'புது மாதிரி டிசைனா இது?'

'அன்னிக்கி பிரச்சன, பிரபலத்துக்கும் மீடியாக்குமான சண்ட பாத்துக்கங்க'.

'*&%$**#@'

'எல்லா மீடியாவும் தன்னத்தானே கிங் மேக்கர்னு நம்ப ஆரம்பிச்சு ஒரு மாமாங்கமாகுது.  தான் சொல்றதத் தான் ஜனங்க கேக்குராங்கனு அதுக்கு ஒரு மெதப்பு.'

'இந்த மொதல்வன் அர்ஜூன் மாதிரியா?'

'அப்படித்தான்னு வச்சுக்கங்களேன்.  எல்லா பிரபலங்களும் அயோக்கியர்கள்னு அது கிட்ட ஒரு தியரி இருக்கு.  அவங்களோட மொகமூடிய கழட்டுறது தான் தன்னோட வேலன்னு அது சீரியசா நம்புது.'
'இதுவும் அந்த சினிமா சீனு தான?'

'அதே தான்.  பிம்பங்கள ஒடைக்கிறதுனு ஒரு சங்கல்பம்.  அந்த வகையில் எல்லா மீடியாக்குள்ளயும் ஒரு சாரு ஒளிஞ்சுட்டு இருக்கார்.'

'ஒடைக்கறதுக்கா?'

'ஹாங்'

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக