எல்லாவற்றின் போதாமைகளையும் ஆய்ந்து தெளிவது தான் பூரணத்தின் பாதைக்கான திறவுகோல் . பாதைக்கான திறவுகோல் தான் ...பயணம் நெடிது ......கண்ணுக்கெட்டா...தூரத்தில் அல்லவா அது காத்துக் கொண்டிருக்கிறது ? " தலித் என்பதை அரசியல் பிரக்ஞையாக விளங்கிக்கொண்ட அடுத்த நிமிடமே இந்தக் கேள்வியும் அவர்களுக்குள் வந்து விடுகிறது . ஏன் நான் தலித்தும் அல்ல ? தலித் சொல்லாடல் , எவ்வளவுக்கு அன்னியோன்யமானதோஅவ்வளவுக்கு வெறுக்கக் கூடியதும் .அந்த வகையில் தலித் அரசியலுக்கும் உடலுறவிற்கும்பெரிய வித்தியாசமில்லை ;இரண்டிலும் ஞாபகங்கள் தான் கிளர்ச்சியைத் தருகின்றன ;அதே போல "போராட்டம் "முடிந்ததும் தனித்தனியே அவரவர் அவரவர் 'உள்ளே 'சுருங்கிக்கொள்ள வேண்டியது தான் .இரண்டுமே தனிமையையும் வெறுமையையும் தான் பெருக்குகின்றன" என்று முன்னுரையிலேயே முகத்தில் அறைந்து விட்டு தன் வேகத்தை நிறுத்திக் கொள்ளாமல் கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்கள் பயணிக்கிறது இந்நூல் . இதன் பேசுபொருள் கால காலமாக நம்மை கணந்தோறும் அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு அரூபமான அபாயம் .கணந்தோறும் வாசனைப் பூச்சுக்களோடு வளைய வரும் ஒரு அரு