Skip to main content

Posts

Showing posts from June, 2016

இன்னொரு வாசகப் பதிவு - நான் ஏன் தலித்தும் அல்ல? - சீமா செந்தில்

எல்லாவற்றின் போதாமைகளையும் ஆய்ந்து தெளிவது தான் பூரணத்தின் பாதைக்கான திறவுகோல் . பாதைக்கான திறவுகோல் தான் ...பயணம் நெடிது ......கண்ணுக்கெட்டா...தூரத்தில் அல்லவா அது காத்துக் கொண்டிருக்கிறது ?  " தலித் என்பதை அரசியல் பிரக்ஞையாக விளங்கிக்கொண்ட அடுத்த நிமிடமே இந்தக் கேள்வியும் அவர்களுக்குள் வந்து விடுகிறது . ஏன் நான் தலித்தும் அல்ல ? தலித் சொல்லாடல் , எவ்வளவுக்கு அன்னியோன்யமானதோஅவ்வளவுக்கு வெறுக்கக் கூடியதும் .அந்த வகையில் தலித் அரசியலுக்கும் உடலுறவிற்கும்பெரிய வித்தியாசமில்லை ;இரண்டிலும் ஞாபகங்கள் தான் கிளர்ச்சியைத் தருகின்றன ;அதே போல "போராட்டம் "முடிந்ததும் தனித்தனியே அவரவர் அவரவர் 'உள்ளே 'சுருங்கிக்கொள்ள வேண்டியது தான் .இரண்டுமே தனிமையையும் வெறுமையையும் தான் பெருக்குகின்றன" என்று முன்னுரையிலேயே முகத்தில் அறைந்து விட்டு தன் வேகத்தை நிறுத்திக் கொள்ளாமல் கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்கள் பயணிக்கிறது இந்நூல் .  இதன் பேசுபொருள் கால காலமாக நம்மை கணந்தோறும் அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு அரூபமான அபாயம் .கணந்தோறும் வாசனைப் பூச்சுக்களோடு வளைய வரும் ஒரு அரு

பெருஞ்சமூக வெறுப்பாளன்? - செல்வேந்திரனின் மதிப்புரை

பெருஞ்சமூக வெறுப்பாளன்? - செல்வேந்திரனின் மதிப்புரை குளிர்ந்த காற்று சுழன்றடித்துக் கொண்டிருக்கும் ஓர் இனிய மாலையில் மிக ஆபத்தான புத்தகத்தைப் பற்றி பேச நாம் குழுமியிருக்கிறோம். மிகப் புராதனமானதும் கனம் தோறும் புதிய பரிமாணங்களைக் கொண்டு முன்னகர்வதும் எதிர் தரப்பு மெளனமாக கேட்டுக்கொண்டிருக்க மட்டுமே அனுதியிருக்கக் கூடியதுமான ‘தலித்’ உரையாடல்களைப் பற்றிய ஒரு புத்தகத்தை மானுடவியல் சமூகவியல் நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் ஆழங்கால் பட்டவரும் இலக்கியத்தில் தேர்ந்த அறிஞரும் புனைவிலக்கியவாதியும் பேராசிரியருமான திரு.டி.தர்மராஜ் எழுதியிருப்பது எவ்வளவு ஆபத்தானது? இந்த நியாயமற்ற போருக்கு இந்த உரையாடலுக்கு முற்றிலும் புதியவனான நான் நண்பன் எனும் முறையில் அழைக்கப்பட்டிருக்கிறேன்.  சில மாதங்களுக்கு முன்பு கலை விமர்சகர் தீப்தா ஆச்சாரின் நேர்காணல் ஒன்று தி இந்துவில் வெளியானது. இந்திய நவீன ஓவியங்களின் உள்ளுறையும் கருப்பொருளும் உள்ளடுக்கும் சாதியப் பரிமாணம் கொண்டவைதான். இதைக் கோடிட்டு காட்டுவதுதான் தலித் ஓவியங்கள் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். டெல்லியின் சவி சவர்க்கர் மற்றும் நமது சந்ரு

நான் ஏன் தலித்தும் அல்ல? - நூல் வெளியீட்டு விழாஅழைப்பு, திருநெல்வேலி

திருநெல்வேலியில் காற்றடிகாலம் தொடங்கி விட்டது. காற்று சமுத்திரம் போல அலையடித்துக் கொண்டிருக்கிறது.  ஒரு வண்டி அளவு காணுகிற மணல் (எந்தப் பாலைவனத்திலிருந்து வந்ததோ தெரியவில்லை?), நகரெங்கும் ஏதோ அவசர ஜோலியாய் திரிந்து கொண்டிருக்கிறது.  மின் கம்பங்களை மீறி வளர்ந்து விட்ட சாலையோர மரங்களை, மின்வாரிய ஊழியர்கள் அரக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   'குத்தாலத்துல தண்ணி விழுதாமா?' என்று ஒருவரையொருவர் நலம் விசாரிப்பதும் தொடங்கி விட்டது. குத்தால சீசன் திருநெல்வேலி பற்றி  ஏன் யாருமே நாவல் எழுதவில்லை? நான், திருநெல்வேலிக்கு வந்து இரண்டு நாட்களாகிறது.  இன்று மாலை (25-06-2016) புத்தக வெளியீட்டு விழா. கவிஞர் தேவேந்திரபூபதி, ஓவியர் சந்ரு, இமையம், ராமாநுஜம், செல்வேந்திரன், இயக்குநர் தாமிரா, நண்பர் மயன் ரமேஷ்ராஜா - எல்லோரும் பேசுகிறார்கள். மாலை 5.30 மணிக்கு, திருநேல்வேலி ஹோட்டல் ஜானகிராமில் இருக்கும் அயோத்தியா ஹாலில் விழா நடைபெறுகிறது.  இதையே அழைப்பாக ஏற்று வாருங்கள்.

நான் ஏன் தலித்?

அன்புள்ள டி. தருமராஜ், சென்னை புத்தகக் காட்சியில் ‘நான் ஏன் தலித் அல்ல?’ புத்தகத்தை வாங்கினேன்.  உங்களது வாதம், பெரும் சங்கடத்தை எனக்குள் ஏற்படுத்தி விட்டது.  ஆணவக் கொலைகள் பற்றிய கட்டுரை (அது கட்டுரை இல்லை கட்டுரைகள்) பல புதிய விஷயங்களைக் கற்றுத் தந்தது.  இப்பொழுது தான், ‘நான் ஏன் தலித் அல்ல?’ என்ற கட்டுரையை வாசித்து முடித்தேன்.  இந்தக் கட்டுரைக்கும் உங்களது ‘நான் பூர்வ பெளத்தன்’ நூலுக்கும் பெரிய பாய்ச்சல் நடந்திருக்கிறது.  அந்தப் புத்தகத்திற்கு நீங்கள் எழுதியிருந்த முன்னுரை எனக்கு நினைவில் இருக்கிறது.  என்னைக் கேட்டால், அதை இந்தப் புத்தகத்தின் முதற்படி என்று சொல்வேன்.  அதை வாசித்திருந்தாலே இப்பொழுது நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ள முடியும் என்றும் நினைக்கிறேன்.  துரதிர்ஷ்டவசமாக அந்தப் புத்தகம் இப்பொழுது எனக்குக் கிடைக்கவில்லை.  அதன் மின் வடிவம் கிடைத்தால் வசதியாக இருக்கும்.  முடிந்தால் அனுப்பித் தாருங்கள்.  அல்லது கிடைக்குமிடத்தை சொன்னால் கூட போதும். சிவமணி பார்த்திபராஜா அனுபுள்ள சிவமணி பார்த்திபராஜா,  2003ல் வெளிவந்த ‘நான் பூர்வ பெளத்தன்’ நூலுக்கான முன்னுரையில

நூல் விமர்சனம்

நான் ஏன் தலித்தும் அல்ல? - நூல் விமர்சனம் (பி. ஆர். மகாதேவன் எழுதியது) பறவையொன்றின் ஒரு சிறகு, ஒரு பக்கம் பறக்கச் சொல்கிறது. வேறொரு சிறகு, எதிர்ப்பக்கத்தில் பறக்கச் சொல்கிறது. இப்படி இரு சிறகுகளும், இரு வேறு திசைகளில் பறக்கச் சொல்லும் பறவையின் தவிப்பே, இந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களிலும். ‘தலித்’ என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதை, ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. அதேநேரம் தலித்துகளின் மீது வன்முறையும் அவமானப்படுத்தல்களும் இன்னபிற ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும் போது, பாதிக்கப்படுபவர்களின் துயரத்தில், சக உயிராகப் பங்கெடுக்கவும், அந்தப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளவும் விரும்பி, தன்னை தலித் என்று உரக்க முன்வைக்க அவருடைய இன்னொரு மனம் உந்துகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயான ஊசலாட்டமே, நூலாசிரியரின் சுயம் சார்ந்த பிரச்னையாகவும், அவையே அவருடைய எழுத்துகளின் ஆதார அம்சமாகவும் விளங்குகின்றன. சாதி ஆணவக்கொலை, மாட்டுக்கறி அரசியல் தொடங்கி ‘மெட்ராஸ்’ திரைப்பட அலசல், பூமணியின் ‘அஞ்ஞாடி’ தொகுப்பின் விமர்சனம், ‘மாதொருபாகன்’ விவகாரம் என பல்வேறு விஷயங்கள் பற்றி, நூலா

சாதி மறுப்பு, 'எலைட்' குணம்!!!

நான் ஏன் தலித்தும் அல்ல? விலை ரூ. 275 ஆசிரியர்  :  டி.தருமராஜ் வெளியீடு :  கிழக்கு பதிப்பகம் பகுதி :  கட்டுரைகள் ISBN எண் :  - Rating ★   ★   ★   ★   ★ ☆   ☆   ☆   ☆   ☆ பிடித்தவை  பறவையொன்றின் ஒரு சிறகு, ஒரு பக்கம் பறக்கச் சொல்கிறது. வேறொரு சிறகு, எதிர்ப்பக்கத்தில் பறக்கச் சொல்கிறது. இப்படி இரு சிறகுகளும், இரு வேறு திசைகளில் பறக்கச் சொல்லும் பறவையின் தவிப்பே, இந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களிலும். ‘தலித்’ என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதை, ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. அதேநேரம் தலித்துகளின் மீது வன்முறையும் அவமானப்படுத்தல்களும் இன்னபிற ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும் போது, பாதிக்கப்படுபவர்களின் துயரத்தில், சக உயிராகப் பங்கெடுக்கவும், அந்தப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளவும் விரும்பி, தன்னை தலித் என்று உரக்க முன்வைக்க அவருடைய இன்னொரு மனம் உந்துகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயான ஊசலாட்டமே, நூலாசிரியரின் சுயம் சார்ந்த பிரச்னையாகவும், அவையே அவருடைய எழுத்துகளி