Skip to main content

நான் ஏன் தலித்தும் அல்ல? - நூல் வெளியீட்டு விழாஅழைப்பு, திருநெல்வேலி

திருநெல்வேலியில் காற்றடிகாலம் தொடங்கி விட்டது.

காற்று சமுத்திரம் போல அலையடித்துக் கொண்டிருக்கிறது.  ஒரு வண்டி அளவு காணுகிற மணல் (எந்தப் பாலைவனத்திலிருந்து வந்ததோ தெரியவில்லை?), நகரெங்கும் ஏதோ அவசர ஜோலியாய் திரிந்து கொண்டிருக்கிறது.  மின் கம்பங்களை மீறி வளர்ந்து விட்ட சாலையோர மரங்களை, மின்வாரிய ஊழியர்கள் அரக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   'குத்தாலத்துல தண்ணி விழுதாமா?' என்று ஒருவரையொருவர் நலம் விசாரிப்பதும் தொடங்கி விட்டது.

குத்தால சீசன் திருநெல்வேலி பற்றி  ஏன் யாருமே நாவல் எழுதவில்லை?

நான், திருநெல்வேலிக்கு வந்து இரண்டு நாட்களாகிறது.  இன்று மாலை (25-06-2016) புத்தக வெளியீட்டு விழா.

கவிஞர் தேவேந்திரபூபதி, ஓவியர் சந்ரு, இமையம், ராமாநுஜம், செல்வேந்திரன், இயக்குநர் தாமிரா, நண்பர் மயன் ரமேஷ்ராஜா - எல்லோரும் பேசுகிறார்கள்.

மாலை 5.30 மணிக்கு, திருநேல்வேலி ஹோட்டல் ஜானகிராமில் இருக்கும் அயோத்தியா ஹாலில் விழா நடைபெறுகிறது.  இதையே அழைப்பாக ஏற்று வாருங்கள்.



Comments

Popular posts from this blog

அம்பேத்கரின் 'தீண்டாமையின் தோற்றம்'

('தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?' என்ற கட்டுரையை முழுமையாக விளங்கிக் கொள்ள இந்தக் கட்டுரை உதவி செய்யும்.  2007ல் எழுதப்பட்ட இக்கட்டுரை, 'அம்பேத்கரின் பன்முகம்' என்ற நூலில் இடம்பெற்றிருந்தது.) தீண்டாமையின் வேர்கள் குறித்து அம்பேத்கர் மேற்கொண்ட ஆய்வுகள் மிகச் சுருக்கமானவை என்றாலும் , தீவிரமான விவாதப் புள்ளிகளை உள்ளடக்கியவை. ' சாதி ' குறித்துப் பரந்த அளவிலும் , தீண்டாமை ', ' வர்ணம் ', ' விலக்கல் ', ' தீட்டு ' என்று குறிப்பாகவும் பல்வேறு வகையான ஆய்வாளர்களால் , வெவ்வேறு தருணங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட சாதிய ஒழுங்கமைப்பு என்ற சொல்லாடலை இரண்டு வகை என்று சொல்ல முடியும். ' சாதி ' என்ற காரணியை அதன் வரலாற்றுத் தன்மையோடும் , நடைமுறை வெளிப்பாடுகளோடும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆய்வாளர்களால் கட்டமைக்கப்பட்ட சொல்லாடலை முதல் வகை என்று கொள்ளலாம். இவ்வகை ஆய்வாளர்களிலிருந்து திட்டவட்டமாக வேறுபடுகிற இரண்டாம் வகையினர் , சாதியத்தின் வேர்களையும் , நடைமுறைச் சிக்கல்களையும் அலசுவதோடு நிற்காமல் , ' சாதி ' யை அழித்தொழிக்கு...

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

வேற்றுமெய்யும் வேற்றுமையும்