Skip to main content

நீட் போராட்டம் - ஒரு ஃப்ளூ ப்ரிண்ட்.

2018, ஜனவரியில் வெளிவரவிருக்கும் 'ஜல்லிக்கட்டு போராட்டம்' பற்றிய புத்தகத்திலிருந்து......
'நீட் தேர்வுக்கு எதிரான வெகுஜன கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வரைபடம் - 
பள்ளிக்கூடங்களை மாலைகளில் அடைக்காதீர்கள்! 
வகுப்பறைகளில் நீட் தேர்வின் அநியாயங்களை மட்டுமே பேசுங்கள்!
நீட் தேர்வு, ஒரு அராஜகம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அப்படி மாற்றுக்கருத்து இருப்பதாய் சொல்கிறவர்கள் கூட, மாநிலத் தேர்வு முறையிலிருக்கும் கோளாறுகளைச் சுட்டிக் காட்ட வந்த கோபத்தாலேயே நீட் தேர்வுக்கு ஆதரவு போலப் பேசுகிறார்கள். மற்ற படி, இந்த ஒற்றை தேர்வு முறையை ஆதரிப்பதற்கான எந்த முகாந்திரமும் யாருக்கும் இல்லை.
இந்தத் தேர்வு முறையின் காரணமாக நேரடியாகப் பாதிக்கப்படுகிறவர்கள், தமிழகப் பள்ளிகளில் படித்த மாணவர்கள். இந்தப் பாதிப்பு, அவர்களது பெற்றோரை உடனடியாகவும், சமூகத்தை பொறுத்திருந்தும், நமது அரசியல் உரிமையை நிதானமாகவும் காவு வாங்கப்போகிறது.
மாநில உரிமைகளைப் பேணுவதற்கான எந்தவொரு முனைப்பும் தைரியமும் இல்லாத அரசாங்கமே நமது பலவீனம். நீதிமன்றங்களும் கைவிட்டு விட்ட நிலையில் இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே கேள்வி - ஏன் தமிழகப் பொதுமக்கள் இந்த அநியாயத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழ மறுக்கிறார்கள்?
வெகுஜன கிளர்ச்சி நடைபெறுவதற்கு சில அனுகூலமான சூழல்கள் தேவைப்படுகின்றன.
1. இந்தப் பிரச்சினையைப் தமிழகப் பொதுப்பிரச்சினையாக சித்தரிக்கக்கூடிய 'பேச்சு' ஒன்று தேவைப்படுகிறது. அதாவது, இது நகர்ப்புற மாணவர்கள் பிரச்சினை, மெட்ரிகுலேசன் மாணவர்கள் பிரச்சினை, மேட்டுக்குடியினரின் பிரச்சினை, பிற்படுத்தப்பட்டவர்களின் பிரச்சினை என்ற விவாதங்களைக் கடந்து இது தமிழகத்தின் பிரச்சினையாக சித்தரிக்கப்பட வேண்டும்.
2. இப்படி சித்தரித்ததை முன்மொழியக்கூடிய ஒரு கதாபாத்திரம் நமக்குத் தேவை. இந்தப் பாத்திரம், சுயநலமற்றவராகவும், எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமலும் செயல்படக்கூடியவர் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு இருக்க வேண்டும். நீட் தேர்வு விஷயத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் இந்த கதாபாத்திரங்கள் என்பது என் கணிப்பு. 
3. ஆசிரியர்கள் என்று சொல்லும் போது, ஆசிரியர் சங்கங்களை நான் சொல்லவில்லை என்பது முக்கியம். சங்கங்கள், ஆசிரியர்களின் சொந்த பணிப்பாதுகாப்புகளை கண்காணிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டவை என்பதால், வெகுஜனம் சங்கங்களை முழுமையாக நம்பிவிடுவது இல்லை. எனவே, நான் இந்தக் கதாபாத்திரங்களை ஆசிரியர்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.
4. சங்கங்களின் சாயல் இல்லாமல், ஆசிரியர்கள் இந்த எதிர்ப்புணர்வுகளை பொது அமைதிக்கு எந்தவொரு பங்கமும் இல்லாமல் நடத்துவது இன்னும் முக்கியம். உதாரணமாய், இந்த எதிர்ப்புகளை ஆசிரியர்கள் அவரவர் பள்ளிகளில் வேலை நேரங்களுக்குப் பின்பும் மாணவர்களோடு இரவெல்லாம் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தத் தொடங்கலாம். இந்த உள்ளிருப்புப் போராட்டம் உடனடியாய் வெகுஜனத்தை ஈர்க்கும். தத்தம் குழந்தைகளைத் தேடிக்கொண்டு பெற்றோர்கள் வர ஆரம்பிப்பார்கள். ஜல்லிக்கட்டுக் கிளர்ச்சியில் மெரினாவும் தமுக்கமும் போராட்டக் களங்களானது போல, இந்த முறை பள்ளிக்கூடங்கள் போராட்டக்களங்களாக மாறும். இதிலொரு நாடகத்தன்மை இருக்கிறது. ஆனால், இந்த நாடகத்தன்மையே வெகுஜனக் கிளர்ச்சிக்கான விதை.
5. பள்ளிக்கூடங்களை ஆசிரியர்கள் அடைக்க மறுத்து, மாணவர்களோடு அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டால் நீட் தேர்வுக்கு எதிரான வெகுஜனக் கோபத்தை எளிதாய் வெளிக்கொண்டு வரமுடியும்.
இது முழுக்க முழுக்க கற்பனை. தமிழ் சினிமாவொன்றின் கிளைமாக்ஸ் காட்சி போல இருக்கலாம். இருக்கலாம் என்ன, அப்படியே தான். ஆனால், இது தான் வெகுஜனங்களை திரட்டுவதற்கான இப்போதைய வழி. வழக்கமாய் இந்த நாடகங்களை தலைவர்களே செய்வார்கள். அவர்கள் இல்லாத பட்சத்தில் மக்கள் தான் செய்ய வேண்டும். 
நீட் தேர்வுக்கு எதிராக, பள்ளிக்கூடங்களை பூட்ட மறுக்கும் தர்ணாக்களை ஆசிரியர்கள் தொடங்கினால்....'

Comments

Anonymous said…
நம் மாநில கல்லூரிகளில் தமிழ் ஒரு கட்டாய பாடமாக வைக்க நமக்கு உரிமை உண்டு. நம் மாநில கல்லூரிகளில் படித்தவர்கள் இங்கு 10 வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்றும் சட்டம் வைக்க வேண்டும்.
நீட் தேர்வு கூடவே கூடாது என்ற அணியில் இருப்பவர் போலும். உங்கள் முந்தைய பதிவுகளில் இது குறித்து பல கருத்துக்கள் சொல்லி இருக்கலாம், நான் படிக்கத்தவறிவிட்டேன் போலும். கொஞ்சம் சுருக்கமாக அல்லது சுட்டி ஒன்று கொடுங்கள்.
MV SEETARAMAN said…
Sir you may take up this problem with UGC/ Educational councils, as you are a respected Professor at the central university. it requires a higher level academic discussions. normal school teacher is ill equipped.

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக