'இளையராஜாவை வரைதல்' அமேசான் கிண்டிலில் மின்நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இணையத்தில் எழுதிய ஆறு பகுதிகளோடு, இன்னும் ஆறு பகுதிகள் சேர்க்கப்பட்டு ஒரு குறுநூலாக வெளிவந்துள்ளது.
இணையத்தில் எழுதிய ஆறு பகுதிகளோடு, இன்னும் ஆறு பகுதிகள் சேர்க்கப்பட்டு ஒரு குறுநூலாக வெளிவந்துள்ளது.
முன்னறிவிப்பு:
இந்தக் குறுநூல் தானாகவே தோன்றியது. சுயம்பு. முதலில் ஒரு கட்டுரை போல எழுத ஆரம்பித்தேன். அதிலும் அந்தக் கட்டுரை ஒரு விளக்கக் கட்டுரையாகவே தொடங்கப்பட்டது.
அயோத்திதாசர் குறித்து நான் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் புத்தகத்தில் சமர்ப்பணம் என்ற பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறேன்:
‘நந்தனைக் கடந்த அயோத்திதாசரைக் கடந்த பெரியாரையும் கடந்த இசைஞானி இளையாராஜாவிற்கு சமர்ப்பணம்’
இந்த வரியை விளக்குவதற்காகவே இதனை முதலில் கட்டுரையாக எழுத ஆரம்பித்தேன். இந்தக் கட்டுரையே வளர்ந்து வளர்ந்து இன்று இப்படி நிற்கிறது.
இதன் ஒரு பகுதி சமூக ஊடகங்களில் வெளி வந்தது. மீதத்தையும் சேர்த்து குறுநூலாக வெளியிடுகிறேன். வழக்கமான இளையராஜா ஆய்வுகளைப் போல இதில் பாடல்களைக் குறிப்பிட்டு நான் எதையும் விளக்கவில்லை. இது வேறொரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
Comments