Skip to main content

வசீகர அரசு இயந்திரத்தின் வருகை!

எவ்வாறு தேசியம், கடவுள் போன்றவை கற்பிதங்களோ அதே போல, மிகத் தூய அதிகாரம் அல்லது வசீகர அரசு என்பதும் கற்பிதம்பளபளப்பான இயந்திரத்தைப் போல, அது கவர்ச்சிகரமானதுஆயுத பூஜையின் போது சாற்றப்படும் சந்தன குங்கும மாலைகள் சூடிய இயந்திரம் என்று சொன்னால் விளங்கும்.  





அரசு இயந்திரத்திற்கு கவர்ச்சியேற்றும் போது என்ன நடக்கிறது?   இயந்திரங்களுக்குப் பொருந்தாத மனிதத்தன்மையை ஏற்றுகிறோம் என்று அர்த்தம்இந்தப் பொருந்தாமையே கவர்ச்சியாக வெளிப்படுகிறது


இதற்கொரு எதிர் உதாரணமும் உண்டுமனிதர்கள் இயந்திரத்தைப் போல செயல்படும் பொழுதும் கவர்ச்சி ஏற்படுகிறதுஇதன், வெகுஜன உதாரணம், போர்னோகிராபி உடல்கள், சர்வாதிகாரிகள்தமிழ் உதாரணங்களும் உண்டு - எம்ஜியாரும் ஜெயலலிதாவும். சினிமா கவர்ச்சி மிகுந்தவர்கள்; ஆனால், இறுதி வரை  இயந்திரந்தைப் போலவே வாழ்ந்தனர் - ரத்த பந்தங்கள் எதுவுமின்றிஎம்ஜியாரின்ரத்தத்தின் ரத்தங்களேஎன்ற வாக்கியம் இதன் ஆழ்மன நீட்சிகலைஞரும், கவர்ச்சியானவர்; அவரது எழுத்தும் பேச்சும் கவர்ச்சியானவைஅவரும் நிர்வாகத்தில் தன்னை இயந்திரமாகவே காட்டிக் கொண்டார் - ராஜ தந்திரி / சாணக்கியர்


மனிதர்கள் இயந்திரமாகுதல் போல, இயந்திரங்களும் மனிதராக முடியும்அறிவியல் புனைகதைகள் இதைக் கொஞ்சம் பேசியிருக்கின்றன.  ‘மனித உணர்வுகள் ஊற்றெடுக்கும் இயந்திரங்கள்என்பது இவற்றின் அடிநாதம்காதலே இக்கதைகளின் பிரதான உணர்வு.  


நிஜத்தில், அரசு இயந்திரம் தன்னை மனிதத்தன்மையோடு வெளிப்படுத்த முனையும் போது, காதல் பெரிதும் உதவுவது இல்லை. நேர்மை, தூய்மை, ஒழுங்கு என்று மீமனித குணங்களை வரிந்து கொள்ளத் தொடங்குகிறது. இன்றைக்கு தமிழக அரசு நடந்து கொள்வதைப் போல.


இதன் காரணமாகவே, அரசு இயந்திரம் மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள ஆரம்பிக்கும் பொழுது, யாரும் அறியாமல் அதற்கொரு மாமனிதத் தன்மை வந்து சேர்கிறதுஇப்படி நடப்பதில் ஆச்சரியமும் இல்லை.  


மனிதத்தன்மை என்பது ஏராளமான தவறுகளுடன் கூடிய உணர்வுகள் என்பதை மறந்து விடக்கூடாதுசர்வசாதாரணமாய் தவறுகள் நிகழவும், மன்னிக்கவும் கூடுகிற காதலை, அறிவியல் கதைகள் பயன்படுத்திக் கொள்வது இதனால் மட்டுமேஅப்படி இல்லாதபட்சத்தில், இரக்கம், நியாயம் போன்ற மனிதவுணர்வுகளை எய்துகிற இயந்திரம் அறிவியல் கதைகளில் கடவுளாகவே பார்க்கப்படுகிறது.  


முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அரசு இயந்திரத்தை மீவியல்புடையதாகக் கட்டமைக்கத் தொடங்கியிருக்கின்றனபளபளப்பான ராணுவ தளவாடங்களின் ஊர்வலம் போலஆனால், இயந்திரங்கள் கொண்டாடப்படுவது ஆபத்தையே விளைவிக்கும் என்று தோன்றுகிறதுஏனெனில் அவற்றிற்கு உருவாக்கப்படும் வசீகரம், உள்ளீடற்ற வசீகரம்சர்வாதிகாரிகள் உள்ளீடற்ற வசீகரத்தையே விரும்புகிறார்கள்அப்படி உருவான உள்ளீடற்ற வசீகரத்திற்காகவே அவர்கள் காத்திருக்கவும் செய்கிறார்கள்.  


திராவிட முன்னேற்ற கழக ஆட்சி உருவாக்கி வரும்வசீகர அரசு இயந்திரம்என்ற யோசனையை நிறைய பேர் விரும்புகிறோம்ஆண் குழந்தைகள் இரும்பு பொம்மைகளில் மயங்குவது போலஆனால், அப்படியொன்று திரள்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது      


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக