Skip to main content

நன்றி வெ. ராமசாமி - பத்ரி சேஷாத்ரி!

மானிடவியல், நாட்டுப்புறவியல், சமூகவியல் சார்ந்த கட்டுரைகளைத் தமிழில் படிப்பதற்கு ஐந்தாறு பேர்களே இருக்கிறார்கள் என்ற நினைப்பில் நிறைய நேரம் நான் எழுதுவதை என் கணிணியை விட்டு வெளியே எடுப்பதே இல்லை.

மேலும் நான்கு பக்கத்திற்குள் கட்டுரை எழுதுகிற ஆளும் நான் இல்லை என்பதால், யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

இப்படித்தான் 2008ல் பாண்டியனின் நூலுக்கு விமர்சனம் கேட்ட காலச்சுவடு, நான் எழுதித் தந்த பக்க அளவைப் பார்த்து விட்டு, இதை விமர்சனமாகவெல்லாம் போட முடியாது என்று கலவரமாகி, விமர்சனக் கட்டுரையாக வேண்டுமானால் வைத்துக் கொள்கிறோம் என்று சமாதானமானார்கள்.

 அப்படியே என் இருபது, முப்பது பக்கக் கட்டுரைகளை வெளியிட 'புது விசை' மாதிரியான இதழ்கள் முன்வந்தாலும், வாசகர்கள் அதற்கு நாலு பக்கமும் பின் அடித்து அப்படியே மொத்தமாய் கடந்து அடுத்த பக்கத்திற்குப் போய்விடுவார்கள்.

என்னைப் போலவே கட்டுரை எழுதுகிற அபாக்கியசாலிகள் மட்டும் தங்களது அடுத்தடுத்த கட்டுரைகளில் எனக்கு மறைமுகக் கண்டனங்களை வைத்திருப்பார்கள்.  நேரடியாய் சொல்லி விட்டால் நான் பிரபலமாகிடுவேனாம்!!!!

இந்த நொம்பலத்திலும், தமிழ்ச் சமூகத்தை எப்பாடு பட்டாவது திருத்தியே தீருவது என்று அப்பப்ப ஒரு 'எழுச்சி' (தப்பா போகுதோ?) உண்டாகும்.

அப்படியொரு கிருஷ்ணபட்சத்தில் தான் இந்த வலைப்பூ ஜனித்தது.

வழக்கம் போல் ஆளண்டாமல் கிடந்த இதனை தங்களது பராக்கிரமங்கள் மூலம் ரங்க நாதன் தெரு போல் மாற்றியமைத்த ஒத்திசைவு என்ற வலைப்பூவில் எழுதும் வெ. ராமசாமிக்கும், கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரிக்கும் நன்றி! (தமிழில் 'நன்றிகள்' இல்லை என்பதால் இரண்டு பேரும் ஒரே நன்றியை சண்டை போடாமல் பப்பாதியாய் பிரித்துக் கொள்ளுங்கள்.)

தமிழ் காத்த குமாரசாமி போல், நான் தப்பிதமாய் உச்சரித்து எழுதிய Robert Deliege என்ற பெயருக்கான ஃப்ரெஞ்ச் உச்சரிப்பை நாகரீகமாய் சுட்டிக் காட்டிய வெ. ராமசாமிக்குக் கடன் பட்டவனானேன்.  உடனே திருத்தியும் விட்டேன்.

அவ்விருவரின் வலைச்சுட்டி கீழே -

http://othisaivu.wordpress.com/2014/11/19/post-420/

http://www.badriseshadri.in/


Comments

Jonathan said…
திரு.தருமராஜ்,

தகுதியான விஷயங்கள் கொஞ்சம் தாமதமானாலும், சரியான நேரத்தில் வெகுமக்களைச் சென்றடையும் என்பது பொதுவில் என் நம்பிக்கை.

நன்றியும், வாழ்த்துகளும்!

Popular posts from this blog

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள தர்மராஜ் அந்த ' நாலைந்துபேரில் ' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.   இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.   அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் ' ஆட்டமாட்டிக் ' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம் , உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு ' கிராஃப்ட் ' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.   மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை , மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும் , தத்துவமும் , உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொண்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உ...