Skip to main content

நன்றி வெ. ராமசாமி - பத்ரி சேஷாத்ரி!

மானிடவியல், நாட்டுப்புறவியல், சமூகவியல் சார்ந்த கட்டுரைகளைத் தமிழில் படிப்பதற்கு ஐந்தாறு பேர்களே இருக்கிறார்கள் என்ற நினைப்பில் நிறைய நேரம் நான் எழுதுவதை என் கணிணியை விட்டு வெளியே எடுப்பதே இல்லை.

மேலும் நான்கு பக்கத்திற்குள் கட்டுரை எழுதுகிற ஆளும் நான் இல்லை என்பதால், யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

இப்படித்தான் 2008ல் பாண்டியனின் நூலுக்கு விமர்சனம் கேட்ட காலச்சுவடு, நான் எழுதித் தந்த பக்க அளவைப் பார்த்து விட்டு, இதை விமர்சனமாகவெல்லாம் போட முடியாது என்று கலவரமாகி, விமர்சனக் கட்டுரையாக வேண்டுமானால் வைத்துக் கொள்கிறோம் என்று சமாதானமானார்கள்.

 அப்படியே என் இருபது, முப்பது பக்கக் கட்டுரைகளை வெளியிட 'புது விசை' மாதிரியான இதழ்கள் முன்வந்தாலும், வாசகர்கள் அதற்கு நாலு பக்கமும் பின் அடித்து அப்படியே மொத்தமாய் கடந்து அடுத்த பக்கத்திற்குப் போய்விடுவார்கள்.

என்னைப் போலவே கட்டுரை எழுதுகிற அபாக்கியசாலிகள் மட்டும் தங்களது அடுத்தடுத்த கட்டுரைகளில் எனக்கு மறைமுகக் கண்டனங்களை வைத்திருப்பார்கள்.  நேரடியாய் சொல்லி விட்டால் நான் பிரபலமாகிடுவேனாம்!!!!

இந்த நொம்பலத்திலும், தமிழ்ச் சமூகத்தை எப்பாடு பட்டாவது திருத்தியே தீருவது என்று அப்பப்ப ஒரு 'எழுச்சி' (தப்பா போகுதோ?) உண்டாகும்.

அப்படியொரு கிருஷ்ணபட்சத்தில் தான் இந்த வலைப்பூ ஜனித்தது.

வழக்கம் போல் ஆளண்டாமல் கிடந்த இதனை தங்களது பராக்கிரமங்கள் மூலம் ரங்க நாதன் தெரு போல் மாற்றியமைத்த ஒத்திசைவு என்ற வலைப்பூவில் எழுதும் வெ. ராமசாமிக்கும், கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரிக்கும் நன்றி! (தமிழில் 'நன்றிகள்' இல்லை என்பதால் இரண்டு பேரும் ஒரே நன்றியை சண்டை போடாமல் பப்பாதியாய் பிரித்துக் கொள்ளுங்கள்.)

தமிழ் காத்த குமாரசாமி போல், நான் தப்பிதமாய் உச்சரித்து எழுதிய Robert Deliege என்ற பெயருக்கான ஃப்ரெஞ்ச் உச்சரிப்பை நாகரீகமாய் சுட்டிக் காட்டிய வெ. ராமசாமிக்குக் கடன் பட்டவனானேன்.  உடனே திருத்தியும் விட்டேன்.

அவ்விருவரின் வலைச்சுட்டி கீழே -

http://othisaivu.wordpress.com/2014/11/19/post-420/

http://www.badriseshadri.in/


Comments

Jonathan said…
திரு.தருமராஜ்,

தகுதியான விஷயங்கள் கொஞ்சம் தாமதமானாலும், சரியான நேரத்தில் வெகுமக்களைச் சென்றடையும் என்பது பொதுவில் என் நம்பிக்கை.

நன்றியும், வாழ்த்துகளும்!

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக