Skip to main content

அயோத்திதாசரியம் - டி. தருமராஜின் இலக்கணமும் இலட்சணமும்

#அயோத்திதாசரியம்


இரண்டு நாள் கருத்தரங்கு.  கொரோனா தொற்று மட்டும் இல்லை என்றால், மாபெரும் விழாவாக நடைபெற்றிருக்க வேண்டியது.  தற்போது இணைய நிகழ்வாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது.  ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூல் ஏராளமானோரை அயோத்திதாசர் ஆய்வுகளில் உற்சாகப்படுத்தியிருக்கிறது.  புதிய பார்வைகள், புதிய சிந்தனைகள், புதிய அணுகுமுறைகள், புதிய வெளிச்சம்…  








அயோத்திதாசரை சாக்காக வைத்துக் கொண்டு புதிய நவீனத்துவத்தைக் கண்டடைய முடியும் என்ற என் நம்பிக்கையை இன்று நான் கண்கூடாகப் பார்க்கிறேன்.  அதை நோக்கிய சிறு நகர்வு இந்தக் கருத்தரங்கம்.  


உண்மையில், இதுவொரு தொகுப்பு நூலுக்கான முயற்சியாகவே ஆரம்பிக்கப்பட்டது.  எனது நூலுக்கான வழிநூல் போல அல்லது திறவுநூல் போல ஒன்றை உருவாக்குவது என்பதே முதல் விதை.  இந்த முயற்சியை ஒற்றை ஆளாக நின்று நடத்திக் கொண்டிருப்பவர் பேராசிரியர் அரிபாபு.  அந்தப் பணி முழுமையடைந்தது என்பதன் அறிகுறியே இந்தக் கருத்தரங்கம்.  கருத்தரங்கை ஒருங்கிணைப்பவர், பேராசிரியர் கோபிநாத்.


வருகிற சனி, ஞாயிறு (7,8-11-2020), இரண்டு நாட்களும் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கருத்தரங்கம் நிகழ்கிறது.  ஒவ்வொரு நாளும் எட்டு கருத்துரையாளர்கள்.  அத்தனை பேரும் நான் நம்பிக்கை வைத்திருக்கும் தமிழ்ச் சிந்தனையாளர்கள்.  நிறைய இளைஞர்கள்.  புதியவர்கள்.  ஆழ்ந்த வாசிப்பையும், எழுத்தையும் உடையவர்கள்.  


இந்த நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.  கலந்து கொள்வதற்கான  விபரங்கள் அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ளன.        

Comments

Popular posts from this blog

அம்பேத்கரின் 'தீண்டாமையின் தோற்றம்'

('தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?' என்ற கட்டுரையை முழுமையாக விளங்கிக் கொள்ள இந்தக் கட்டுரை உதவி செய்யும்.  2007ல் எழுதப்பட்ட இக்கட்டுரை, 'அம்பேத்கரின் பன்முகம்' என்ற நூலில் இடம்பெற்றிருந்தது.) தீண்டாமையின் வேர்கள் குறித்து அம்பேத்கர் மேற்கொண்ட ஆய்வுகள் மிகச் சுருக்கமானவை என்றாலும் , தீவிரமான விவாதப் புள்ளிகளை உள்ளடக்கியவை. ' சாதி ' குறித்துப் பரந்த அளவிலும் , தீண்டாமை ', ' வர்ணம் ', ' விலக்கல் ', ' தீட்டு ' என்று குறிப்பாகவும் பல்வேறு வகையான ஆய்வாளர்களால் , வெவ்வேறு தருணங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட சாதிய ஒழுங்கமைப்பு என்ற சொல்லாடலை இரண்டு வகை என்று சொல்ல முடியும். ' சாதி ' என்ற காரணியை அதன் வரலாற்றுத் தன்மையோடும் , நடைமுறை வெளிப்பாடுகளோடும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆய்வாளர்களால் கட்டமைக்கப்பட்ட சொல்லாடலை முதல் வகை என்று கொள்ளலாம். இவ்வகை ஆய்வாளர்களிலிருந்து திட்டவட்டமாக வேறுபடுகிற இரண்டாம் வகையினர் , சாதியத்தின் வேர்களையும் , நடைமுறைச் சிக்கல்களையும் அலசுவதோடு நிற்காமல் , ' சாதி ' யை அழித்தொழிக்கு...

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

வேற்றுமெய்யும் வேற்றுமையும்